எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி, பாலக்காட்டூர், சூரியம்பாளையம் மண்டலம் 1 பகுதியில் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் மூலம் இன்று (19.01.2017) மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 761 வீடுகள் ரூ.15 கோடியே 98 இலட்சம் மதிப்பீட்டிலும், பேரூராட்சி பகுதிகளில் 1,049 வீடுகள் ரூ.22.03 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 1,810 வீடுகள் ரூ.38.01 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு) கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு) ஆகியோர் முன்னிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்கள்.
இவ்விழாவில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது,
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை வழங்கியுள்ளார்கள். இத்திட்டம் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாமல், தமிழ்நாட்டில் தான் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தியுள்ள்ளார்கள். பள்ளி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, நோட்டு புத்தகங்கள், 4 செட் சீருடை, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் விலையில்லாமல் வழங்கியுள்ளார்கள். சமூக நலத்துறையின் மூலம் ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கு வழங்கப்பட்டு வந்த 4 கிராம் தங்கத்தினை 8 கிராமாக வழங்கியவர் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா .
அதேபோல் வீடுகளுக்கு 100 யூனிட் வரையிலும், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரையிலும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் வரையிலும் இலவச மின்சாரம் வழங்கியுள்ளார்கள். ஏழை, எளியோர் அனைவருக்கும் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏழை, எளிய மக்கள் இத்திட்டத்தினை நன்கு பயன்படுத்தி வாழ்வில் மேலும் உயர வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்ததாவது,
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு புதிய குடியிருப்பு கட்ட நிதியுதவி வழங்கப்படும். குடிசைப்பகுதிகள் மற்றும் இதர பகுதிகளில் உள்ள குடிசைகளில் உள்ள குடும்பங்கள் தாங்கள் வாழும் இடத்தின் நில உரிமத்திற்கான ஆவணம் உடையவர்களாக இருப்பின் பயனாளிகள் தாமாக வீடுகளை கட்டுதல் திட்டத்தின் கீழ் தகுதி உடையவர்களாவர். தாங்கள் வசிக்கும் மனைக்கான பட்டா இருந்தால் போதுமானதாகும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிகள் தங்களது பகுதியிலுள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அலுவலகத்தினை அணுகி அதற்கான மனுவினை அளிக்கும் பட்சத்தில் அப்பகுதிக்கு ஒருங்கிணைந்த வீட்டுவசதி திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு இத்திட்டத்தின்கீழ் வீடுகள் கட்ட மத்திய அரசால் ரூ.1.50 இலட்சம் மற்றும் மாநில அரசால் ரூ.60,000ஃ- மொத்தம் மானியமாக ரூ.2.10 இலட்சம் வழங்கப்பட்டும். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகை 4 தவணையாக அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பயனாளிகள் வீட்டின் அடித்தளம் அமைத்தவுடன் முதல் தவணைத் தொகையாக ரூ.50,000ஃ-, கதவு மற்றும் ஜன்னல் மேல்மட்டம் கட்டி முடித்தவுடன் 2வது தவணைத்தொகையாக ரூ.50,000ஃ-, கான்கிரீட் மேற்கூரை முடித்தவுடன் 3-வது தவணைத்தொகையாக ரூ.50,000ஃ-, அனைத்து கட்டுமான பணிகளும் கட்டி முடித்தவுடன் 4-வது தவணைத்தொகையாக ரூ.60,000ஃ- என மொத்தம் ரூ.2.10 இலட்சம் வழங்கப்படும். பயனாளிகள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டிக்கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 761 வீடுகள் ரூ.15.98 கோடி மதிப்பீட்டிலும், பேரூராட்சி பகுதிகளில் 1,049 வீடுகள் ரூ.22.03 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 1,810 வீடுகள் ரூ.38.01 கோடி மதிப்பீட்டில் கட்டிட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா(எ)கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஷ், வருவாய் கோட்டாட்சியர் இர.நர்மதாதேவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் பி.சி.இராமசாமி, தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை தலைவர் எம்.ஜி.பழனிசாமி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், தமிழ்நாடு குடிசைபகுதி மாற்று வாரிய மேற்பார்வை பொறியாளர் வெ.சுப்பிரமணியன் (கோவை சரகம்), கண்காணிப்பு பொறியாளர் வி.சுப்பிரமணியன் (ஈரோடு), நிர்வாக பொறியாளர் கே.ஜி.நஞ்சப்பன், உதவி பொறியாளர் தமிழரசு, உதவி செயற்பொறியாளர் டி.ஜெயராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் போலி வீடியோக்களை உருவாக்கி தவறான தகவலை பரப்புகின்றனர் : கர்நாடகாவில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
29 Apr 2024பெங்களூரு : தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி செயற்கை நுண்ணறிவு மூலம் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்றும் மத அடிப்பட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.