முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் அருகே கைக்குழந்தையுடன் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

 திண்டுக்கல், - திண்டுக்கல் அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல் அருகிலுள்ள மொட்டணம்பட்டியில் ஆள் இல்லா ரெயில்வே கிராசிங் உள்ளது. இங்கு நேற்று பகல் 11 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது கைக்குழந்தையுடன் தண்டவாளம் அருகே பெண் நிற்பதை பார்த்த என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்த முயன்றார். ஆனால் அதிவேகத்தில் வந்ததால் நிறுத்த முடியவில்லை. அந்த நேரத்தில் ரயில் அப்பாதையில் கடந்து சென்ற போது கைக்குழந்தையுடன் நின்ற பெண் ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்ளின் உடல்களை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட பெண்ணிற்கு சுமார் 25 வயது இருக்கும். கழுத்தில் தாலி அணிந்திருந்தார். இறந்த கைக்குழந்தைக்கு சுமார் ஒன்றரை வயது இருக்கும். அவர்கள் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்