எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.கவினர் சட்டசபையில் வன்முறையில் ஈடுபட்டனர் என்று அ.தி.மு.க செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்களை வெளியேற்றி, சபாநாயகர் ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கலவரத்தை உருவாக்குகிறது
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசியலில் திட்டமிட்டு தி.மு.க. குழப்பம், கலவரத்தை உருவாக்கி வருகிறது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சபையை ஒத்திவைத்து பின்னர் ஒரு நாளில் நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இரண்டு பிரச்னைகளை தி.மு.கவினர் சட்டசபையின் முன் வைத்தார்கள். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டியது தானே இதில் என்ன தயக்கம் என்று நினைக்க தோன்றும், ஆனால் ஏன் ரகசிய வாக்கெடுப்பு தவிர்க்கப்பட்டது என்பதற்கு நியாயங்கள் பல இருந்தாலும் ரகசிய வாக்கெடுப்பு என்பது சட்டத்துக்கு விரோதமானது.
சட்டத்துக்கு எதிரானது
ரகசிய வாக்கெடுப்பு கோருவது சட்டத்துக்கு எதிரானது. கட்சி தாவல் சட்டத்துக்கு எதிரானது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தும் போது அவர்கள் மாற்றி ஓட்டு போட்டால் அவர்களை எப்படி கண்டுபிடிப்பது? சட்டத்தில் இடம் இல்லாததால் தான் தி.மு.க.வின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரிக்கிறார். மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் கொடுத்திருக்கிறார். காலம் தாழ்த்தாமல் 2 நாளில் நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களை தொகுதிக்கு சென்று மக்கள் கருத்தறிந்து சிந்தித்து ஓட்டு போட வேண்டும். இதற்காக சட்டசபையை ஒத்திவைக்க வேண்டும் என்று தி.மு.க. கூறுகிறது. அப்படியே சட்டமன்ற உறுப்பினர்களை ஆங்காங்கே தொகுதிக்கு சென்று விட்டு அவர்களை திரும்ப விடாமல் செய்தால் என்ன செய்வது? எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் 80 சட்டமன்ற
உறுப்பினர்களை கடத்தி சென்று விட்டால் என்ன செய்வது?
வெளியேற்றம் ஏன்?
தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு நம்பிக்கை தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இது சரியா என்று கேட்கிறார்கள். சட்டசபையில் 74 உறுப்பினர்கள் இருந்தாலே தீர்மானம் நிறைவேற்ற முடியும். சட்டசபையில் கோரம் இல்லாவிட்டால் தான் நிறைவேற்ற முடியாது. சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்ட விரோதமாக நடக்கிறார்கள். ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டத்தில் இடம் இல்லை. இதனைத் தான் சபாநாயகர் சொன்னார். சட்டசபையை ஒத்தி வைப்பதும், ஒத்தி வைக்காததும் சபாநாயகரின் உரிமை. சபாநாயகரின் தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்யலாம். வெளிநடப்பு செய்வது தான் தி.மு.க.விற்கு கை வந்த கலையாயிற்றே? சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தான் சபாநாயகர் வெளியேற்றினார். சட்டசபையை நடத்தவிடாமல் செய்ததால் தி.மு.கவை வெளியேற்றினார். அது அவருடைய உரிமை. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்களை வெளிநடப்பு தானே செய்தார்கள். தி.மு.க.வினர் கலவரம் செய்ததால் தான் வெளியேற்றப்பட்டார்கள்.
ஆட்சியை கவிழ்க்க...
இப்போது சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. கொடுத்திருக்கிறார்கள். நம்பிக்கை தீர்மானம் சட்டசபையில் வரும்போது தி.மு.க.வின் நிலை பற்றி ஸ்டாலின் என்ன சென்னார். தீர்மானத்தில் நடுநிலை வகிப்போம் என்றார். மறுநாள் இதனை எதிர்ப்போம் என்றார். என்ன காரணம்? அ. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை மாற்றி விடலாம். ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று தி.மு.க. நினைத்து தங்கள் நிலையை மாற்றிக்கொண்டார்கள். ஆட்சி கவிழ்ப்பு மட்டும் தான் தி.மு.க.வின் ஒரே நோக்கம். எனவே தான் சட்டசபையை நடத்த விடாமல் கலாட்டா செய்தனர். கவர்னரிடம் சென்றார்கள். ஜனாதிபதியை சந்திக்க போகிறோம் என்றார்கள். நம்பிக்கை தீர்மானம் செல்லாது என்று கோர்ட்டுக்கு போகிறார்கள். நம்பிக்கை தீர்மானம் செல்லாது என்று யாராவது சொல்வார்களா என்று பார்க்கிறார்கள். இப்போது உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இளைஞர்கள், மாணவர்கள் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். எப்படியாவது ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தி.மு.க. இருக்கிறது.
அழிவை நோக்கி ...
சபாநாயகரை தி.மு.க எதிர்ப்பது சரி. அவரை பிடித்து தள்ளினால் என்ன பொருள். தாழ்த்தப்பட்டவர்களாக இருந்து பார்த்தால் அதன் வலி தெரியும், சபாநாயகர், தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீது கைவைத்து தள்ளுகிறார்கள். அதனால் தான் அனாவசியமாக துச்சமாக நினைத்து தள்ளுகிறார்கள், சபாநாயகர் மிகுந்த கண்ணியத்துடன் நடந்து கொண்டு ஜனநாயகத்தை காப்பாற்றி இருக்கிறார். தி.மு.க ஆக்கப்பூர்வமாக எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். இப்படி எதிர்ப்பது அவர்கள் அழிவை நோக்கி செல்கிறார்கள் என்பது உறுதியாகியிருக்கிறது. கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை மிரட்டப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சபாநாயகர் தலையிட முடியாது. வெளியில் நடைபெறும் சம்பவங்களுக்கு அவர் பொறுப்பல்ல இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்