முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படியில் தொங்கியபடி பயணம்: சென்னையில் மின்சார ரெயிலிலிருந்து தவறி விழுந்து 3 பேர் பலி

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      சென்னை

சென்னையில் மின்சார விரைவு ரெயிலில் படியில் தொங்கியபடி பயணம் செய்த 3 பேர் மின்கம்பம் மோதி கீழே விழுந்ததில் உயிரிழந்தனர்.4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

ஓடும் மின்சார ரெயிலில்இருந்து தவறிக் கீழே விழுவிருந்த ஒருவரை காப்பாற்ற அடுத்தவர் பாய்ந்து சென்று கைகொடுத்து உதவ முற்பட்டபோது 10 பேர் அடுத்தடுத்து கீழே விழுந்தனர். அவர்களில் 3 பேர் பலியானர்கள். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.பழவந்தாங்கல் பரங்கிமலை இடையே நேற்று காலையில் மின்சார ரெயிலில் பயணம் செய்த போது இந்த சம்பவம் நடந்தது.சென்னை அருகே உள்ள பெருங்களத்தூரைச் சேர்ந்தவர்கள் பிரவீன்ராஜ் வயது 19 , மாரி வயது 22. இவர்கள் கூலி வேலை செய்து வந்தனர். இருவரும் நேற்று காலையில் தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் மின்சார ரெயிலில் பயணம் செய்தனர். அப்போது காலை 8 மணி 50 நிமிடம். அலுவலக நேரம் என்பதால் ஏராளமானவர்கள் அந்த ரெயில் பெட்டியில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். அதுபோல் பிரவீன்ராஜ் , மாரி இருவரும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.பழவந்தாங்கல் பரங்கிமலை ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது ரெயில்பாதை ஓரம் சிக்னல் விளக்குகளை சரிசெய்ய பொருத்தப்பட்டுள்ள ஏணியில் ஒருவரின் தோளில் மாட்டியிருந்த பேக் சிக்கியது. அவர் அடிபட்டுகீழே விழவிருந்தார். அவரை உடனடியாக மீட்டுவிட படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பிரவீன்ராஜ் , மாரி, மதுசூதனன் உட்பட 9 பேர் அடுத்தடுத்து கைகொடுத்து உதவி வீரசாகச முயற்சி செய்தனர். இதில் 10 பேரும் கீழே விழுந்தனர். அவர்களில் பிரவீன்ராஜ் , மாரி ,மதுசூதனன் மூவரும் பலத்த காயம் அடைந்து அதே இடத்தில் இறந்தனர். மேலும் பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த கோபிநாத் வயது 22 மற்றும் சுமார் 20, 25 வயது மதிக்கத்தக்க 7 வாலிபரும் காயமடைந்தனர். அரசு பொதுமருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்