முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் த.மா.கா. ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      ஈரோடு

ஈரோடு மாவட்ட த.மா.கா. சார்பில் ஈரோடு காந்திஜி ரோட்டில் தீயணைப்பு நிலையத்திற்கு அருகில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் பி.விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் பி.எஸ்.எஸ்.சச்சிதானந்தம் (வடக்கு), வி.பி.சண்முகம் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல் எஸ்.சேகர், துணைத்தலைவர் ஆர்.ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு 6 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும். . பாலாறு மற்றும் மேகதாதுவில் தடுப்பணை கட்டும் பணியை தடுக்க வேண்டும். மீனவர் பிரச்சினையில் நிரந்தரதீர்வு காண வேண்டும்.உள்பட 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்