முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக மாநிலத்தில் ஷேர் ஆட்டோக்கள் மீது லாரி மோதிய விபத்தில் 11 பெண்கள் பலி

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

பெங்களுரு, கர்நாடக மாநிலத்தில் ஷேர் ஆட்டோக்கள் மீது லாரி மோதிய விபத்தில் 11 பெண்கள் பலியாகினர்.
 
கட்டுப்பாட்டை இழந்தது...

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மலக்கால்மோர் தாலுகா எலராம்புரா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்-19-ல் நேற்று காலை பெண் கூலி தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு 2 ஷேர் ஆட்டோக்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த 2 ஷேர் ஆட்டோக்கள் மீது மோதியது. மேலும் டெம்போ டிராவலர் வேன் மீதும் பயங்கரமாக மோதியது.

11 பெண்கள் பலி

இந்த விபத்தில் கூலி தொழிலாளர்களை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோக்கள் சுக்குநூறாக நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 11 பெண்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். பலரது உடல்கள் ரோட்டில் சிதறி கிடந்தன. 7 பேர் காயமடைந்தார்கள். உடனே அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்