முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 8 மே 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த ஐந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ,மாணவியர்களுக்கு 1,40,000 க்கான காசோலையினை கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்

குடிநீர் வசதி

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்; சி.கதிரவன் தலைமையில் (08.05.2017 ) நடைபெற்றது. இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்வசதி, பட்டா வேண்டியும், கல்வி உதவித் தொகை, ஓய்வூதியத் தொகை, இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டி, வேண்டியும் மற்றும் சாலை வசதி வேண்டியும், மின் இணைப்;பு, வீட்டுமனைப்பட்டா, பல்வேறு கோரிக்கைகள் உள்ளிட்ட மொத்தம் 211 - மனுக்களும் , மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 7- மனுக்களும் ஆக மொத்தம் 218 - மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.தொடர்ந்து மாவட்ட கலெக்டர் 10 மற்றும் 12 ம்வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த ஐந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ,மாணவியர்களுக்கு மொத்தம் ரூ. 1,40,000 க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, உதவி ஆணையர் ( ஆயம்) முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வசந்தா,மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலர் வீ.சிவசங்கரன் , மாவட்ட பிற்பட்டோர் நலத் துறை அலுவலர் அ.அய்யப்பன் , செய்தி மக்கள தொடர்பு அலுவலர் மு.சேகர், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்