எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 452 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன், மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில், தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் ரூ.2கோடியே 21லட்சத்து 66ஆயிரத்து 815 மதிப்பில் 452 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பேசியதாவது:- இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, 'மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற கோட்பாட்டினை கொள்கையாக கொண்டு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். அவர்கள் காட்டிய வழியினை பின்பற்றி செயல்படும் தமிழ்நாடு அரசு ஜெயலலிதா செயல்படுத்திய அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தொடர்ந்து சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்கு விலையில்லா 4 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு எண்ணற்ற பெண்கள் பயனடைந்துள்ளனர். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது பெண்களின் திருமணத்திற்கு வழங்கப்படும் விலையில்லா 4 கிராம் தங்கத்தினை 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் நடைபெறும் இவ்விழாவில் சமூக நலத்துறையின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 302 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே 82லட்சத்து 25ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகை மற்றும் விலையில்லா 8 கிராம் தங்கம் உட்பட, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் மொத்தம் 452 பயனாளிகளுக்கு ரூ.2கோடியே 21லட்சத்து 66ஆயிரத்து 815 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் மாணவ, மாணவியர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தினை ஊக்கப்படுத்தும் வகையில் விலையில்லா மிதிவண்டிகள், விலையில்லா மடிக்கணினிகள் உட்பட 14 வகையான மாணவர் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்பான திட்டங்களின் மூலமாகவும், மாணவ, மாணவியர்களின் கடின உழைப்பாலும், ஆசிரியர்களின் சிறந்த வழிகாட்டுதலின் மூலமாகவும், 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், மாணவ, மாணவியர்களின் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 96.77 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. இதற்காக கடுமையாக உழைத்த மாவட்ட கலெக்டர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல தற்போது நிலவி வரும் வறட்சியான சூழ்நிலையில் பொதுமக்களின் குடிநீர்; தேவையினை பூர்த்தி செய்வதற்காக கூடுதல் குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் ரூ.17.19 கோடி மதிப்பில் மொத்தம் 1,140 குடிநீர் பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அவற்றில் 85 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதவிர மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், ஊரணிகள் மற்றும் நீர்;வரத்து கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி எதிர்வரும் மழைக்காலத்தில் அதிகளவில் குடிநீர் சேமிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி அமைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு பொதுமக்கள் நலனை மேம்படுத்திடும் விதமாக தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில் சமூக நலத்துறையின் மூலம் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு விலையில்லா 4 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-2017 நிதியாண்டில் 4,381 பயனாளிகளுக்கு ரூ.19.90 கோடி மதிப்பில் விலையில்லா 4 கிராம் தங்கம் (மொத்தம் 17.524 கிலோ கிராம்) மற்றும் திருமண நிதியுதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1,345 பெண் குழந்தைகளுக்கு ரூ.3.35 கோடி மதிப்பில் வைப்புத் தொகை ரசீது வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் 104 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 18 வயதிற்குட்பட்ட 56 பெண் குழந்தைகளுக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இன்றைய தினம் நடைபெறும் இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 452 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். இவ்விழாவில் மாவட்ட சமூகநல அலுவலர் சி.குணசேகரி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வ.முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட கலெக்;டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) உமா மகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேல் உட்பட அரசு அலுவலர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 44 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.
-
நிலவில் கால்பதிக்கும் இந்தியா: கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள்: வைரலாகும் பாக். எம்.பி.யின் பேச்சு
16 May 2024இஸ்லாமாபாத், இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது என அந்நாட்டு எம்.பி.
-
பெண் எம்.பி மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
16 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார
-
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி முயற்சி: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
16 May 2024லக்னோ, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் முயற்சித்தன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&nbs
-
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
16 May 2024சென்னை, தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அபராதம் விதித்துள்ளது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்
16 May 2024சென்னை, சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவ
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
கொடைக்கானலில் இன்று முதல் 61-வது மலர் கண்காட்சி துவக்கம்: ஒரு கோடி மலர்களால் பூத்துக்குலுங்கும் பிரையண்ட் பூங்கா
16 May 2024கொடைக்கானல், கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகின்றது. பிரையண்ட் பூங்காவில் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
-
செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
16 May 2024சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்
-
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு: வரும் 19-ம் தேதி தொடங்க திட்டம்
16 May 2024நாகை, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சுலோவேக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது 71 வயதான எழுத்தாளர் என தகவல்
16 May 2024மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று முன்தினம் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்தார்.
-
10, 12-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி: தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு
16 May 2024சென்னை, தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழில் சென்டம் எடுத்த மாணவர்களுக்கு மாநில
-
புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடற்கரையில் இருந்து மக்களை வெளியேற்றிய போலீசார்
16 May 2024புதுச்சேரி, புதுச்சேரியில் நேற்று காலை முதலே அவ்வப்போது சாரல் மழை பொழிகிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
-
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
16 May 2024சென்னை, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நரம்பியல்துறைக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ. 65 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
16 May 2024சென்னை, செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
16 May 2024புது டெல்லி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை
16 May 2024ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
பெங்களூரு மருத்துவமனையில் திருமாவளவனுக்கு கால்வீக்க சிகிச்சை
16 May 2024சென்னை, மக்களவைத் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக வி.சி.க.
-
கொச்சி துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய வாலிபர் கைது
16 May 2024திருவனந்தபுரம், கொச்சி துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய வாலிபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மாணவர் தற்கொலை
16 May 2024சென்னை, ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
16 May 2024