எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் ஆயத்துறையில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), பேரூராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து நடத்தும் ஏரி மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண், மண் மற்றும் களிமண் போன்றவைகளை விவசாயம் மற்றும் பொதுபயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கலெக்டர் டி.பி.ராஜேஷ், ., தலைமையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் விண்ணப்பங்களை வழங்கி பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது,
தூர்வாரும் பணி
அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அரசாணை எண்.50 தொழில்துறை நாள்.27.04.2017ன்படி விவசாயிகளுக்கு விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண், மண் மற்றும் களிமண் ஆகியவற்றினை தூர்வாரி இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் பெருமாள் ஏரியில் தூர்வாரும் பணி 34,671 கன மீட்டர் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
6503 ஏக்கர் பயன்பெறும்
இதுவரை 1449 கன மீட்டர் வண்டல் மண் தூர்வாரப்பட்டு; பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயத்திற்கு இருபோகம் பயிரிடுவதற்கு 6503 ஏக்கர் பாசனத்திற்கு குறைபாடின்றி நீர் கிடைக்கப்பெறும். இத்திட்டத்தினால் குறிஞ்சிப்பாடி வட்டத்திலுள்ள பூண்டியான்குப்பம், அகரம், பள்ளிநீர் ஓடை, ஆலப்பாக்கம், பூவாணிக்குப்பம், ஆதிநாராயணபுரம், தானூர், தீர்த்தனகிரி, சிறுபாளையூர், கள்ளையாண்குப்பம், குண்டியமல்லூர், காயல்பட்டு போன்ற கிராமங்கள் பாசன வசதி முழுமையாக பெறும். வண்டல் மண், மண் மற்றும் களிமண்ணை விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலங்களுக்கு அதிகபட்சமாக 1 ஏக்கருக்கு 75 கன மீட்டரும். (25 டிராக்டர் லோடு), புஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 90 கனமீட்டரும் (30 டிராக்டல் லோடு), வீட்டு பயன்பாட்டிற்கு 30 கன மீட்டரும் (10 டிராக்டர் லோடு)க்கு மிகாமலும், மண்பாண்ட தொழிலுக்கு 60 கன மீட்டர் (20 டிராக்டர் லோடு)க்கு மிகாமலும் எடுத்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கலாம்
இத்திட்டத்தின் கீழ் தூர்வார பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்திலோ, கிராம நிர்வாக அலுவலகத்திலோ, பொதுப்பணித்துறை சிறப்பு முகாம்களிலோ அல்லது இந்நிகழ்ச்சியில் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்து ஏரி அமைந்துள்ள சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் அளித்து வண்டல் மண், மண் மற்றும் களிமண்ணை இலவசமாக எடுத்துச்செல்லலாம். எனவே, கடலூர் மாவட்டத்தில் உள்ள 535 ஏரிகளில் 18.6 இலட்சம் கன மீட்டர் அளவிற்கு வண்டல் மண் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
அமைச்சர் வாழ்த்து
இந்த சிறப்பான திட்டத்தினை விவசாயிகளும், பொதுமக்களும், மண்பாண்ட தொழிலாளர்களும் நன்கு தெரிந்துகொள்ளும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் போதுமான அளவிற்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். அதன்பேரில் நீங்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் நன்கு பயன்பெற்று விவசாய நிலங்களின் மகசூலை அதிகரிப்பதோடு வாழ்வாதாரத்தை உயர்த்தி பொருளாதா முன்னேற்றமடைந்து வாழ்வாங்கு வாழவேண்டும் என வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,தலைமையுரையில் தெரிவித்ததாவது,
பயனடைந்த 2723 விவசாயிகள்
தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அரசாணை எண்.50 தொழில்துறை நாள்.27.04.2017ன்படி விவசாயிகளுக்கு விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண், மண் மற்றும் களிமண் ஆகியவற்றி தூர்வாரி இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள 535 ஏரிகளில் 18.6 இலட்சம் கன மீட்டர் அளவிற்கு வண்டல் மண் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதுவரை 2723 விவசாயிகள், 99,328 கன மீட்டர் வண்டல் மண் எடுத்துச் சென்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் எளியமுறையில் பயன்பெறும் வகையில் இலவசமாக வண்டல் மண், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் நன்கு பயன்பெற்று விவசாய நிலங்களின் மகசூலை அதிகரிப்பதோடு வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் ஏரிகளில் வண்டல் மண், மண் மற்றும் களிமண் இலவசமாக எடுத்துச்செல்வதற்குரிய விண்ணப்பத்தினை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் விவசாயிகளுக்கு வழங்கி, பணிகள் மேற்கொள்வதற்கான பர்மிட்டினை வழங்கினார்.
பலர் பங்கேற்பு
இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும் பெருமாள் ஏரி விவசாய சங்க துணைச் செயலாளர் ஜி.பாலதண்டாயுதம் வரவேற்று பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்தராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் எஸ்.அருணகிரி, பார்த்திபன், எஸ்.சண்முகம், பாஸ்கர். சிவசங்கரன், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் ஜான்சிரானி, விவசாய சங்கத்தலைவர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இறுதியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் எஸ்.அருணகிரி நன்றியுரையாற்றினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.