முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக் ராணுவ தாக்குதலில் 15 தீவிரவாதிகள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

பாக்தாக் : ஈராக்கில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலியா யினர்.

ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள ஹிம்ரீன் மலைப்பகுதி, கிழக்குப் பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தின் சில பகுதிகள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்தப் பகுதியைக் கைப்பற்ற ராணுவம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தியாலா மாகாணத்தின் சில பகுதிகளில் ஈராக் ராணுவம் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் மெஜிர் அல்-அஜாவி கூறியபோது, “இந்தத் தாக்குதலில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஐஎஸ் அமைப்பினரின் வாகனங்கள், 5 மோட்டார் சைக்கிள்கள், 5 மறைவிடங்கள் தகர்க்கப்பட்டன” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து