எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி:-காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் சார்பில், தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 24-வது ஆண்டு அமர்வின் மூன்று நாள் மாநாட்டின் நிறைவு விழா பல்கலைக்கழக லெ.சித.லெ. பழனியப்பச் செட்டியார் நினைவு கலையரங்கில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா அவர்கள் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று தலைமையுரையாற்றினார். அவர் தமது உரையில் ஒவ்வொருவரும் வரலாற்று உணர்வை வளர்த்துக்கொள்வதன் மூலம் மனித பண்பாட்டு வரலாற்றை நல்ல முறையில் அறிந்துகொள்ளவதுடன் நமது ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும் என்றார். பல்வேறு மாநிலங்கள், தேசங்கள், மற்றும் உலக வரலாறுகளை படிப்பதன்; மூலம் மன்னர்கள் எவ்வாறு ஆட்சி செய்தார்கள் என்பதையும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் பற்றியும் அதற்கு எவ்வாறு தீர்வு கண்டார்கள் என்பதையும் அறிந்துகொள்ளவதோடு மக்களுiடைய நலனுக்கு என்னவெல்லாம் செய்தார்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
இன்றைய இளைய சமூதாயத்தினர் வரலாற்றை முறையாக படிப்பதன் மூலம் அவர்கள் ஒரு சிக்கலான சூழலில் சரியான மற்றும் தைரியமான முடிவுகளை எடுப்பதற்கு வரலாற்று அறிவு பெரிதும் உதவும் என்றார். இன்றைய சூழலில் மாணவர்கள் தேசிய மற்றும் உலக வரலாறு பற்றிய தெளிவான அறிவை பெற்றிருந்த போதிலும் தத்தம் பகுதியைச் சேர்ந்த வரலாற்று முக்கியத்துவங்களை அவர்கள் சரிவர தெரிந்திருக்கவில்லை. எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தத்தம் பகுதியைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு முதலில் கற்றுத்தர வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு வரலாற்று பாடத்தின் முக்கியத்துவம் பற்றியும் வரலாற்றில் சிறப்பு பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை கோடிட்டு காட்டி அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் செயல்பட ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திரு. எஸ்.முத்தையா, வரலாற்று அறிஞர் மற்றும் எழுத்தாளர், நிறைவு விழா பேருரையாற்றினார். அவர்தம் பேருரையில் வரலாறு என்பது அனைவரும் ஆர்வத்துடன் படிக்கக் கூடிய பாடமாகும். வரலாறு படிக்கும் மாணவர்களிடம் வரலாற்றை பாடப்புத்தகங்களில் உள்ள செய்தியாக மட்டும கற்பிக்காமல் அதனை ஒரு கதை வடிவில் கற்பிப்பதன் மூலம் அவர்களிடையே ஒரு ஆர்வத்தை உருவாக்க முடியும் என்றார். அவர் மேலும் பேசுகையில் வரலாறு, புவியியல், குடிமையியல், சுற்றுப்புறவியல் இவை நான்கும் தனித்தனிப் பாடங்களாக 3ஆம் வகுப்பு முதல் கற்றுத் தரவேண்டும். அதோடு அந்தந்த பகுதியைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவத்துவத்தையும் கற்றுத்தருவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் ஒரு வரலாறு எனவே ஒரு மனிதன் குறைந்தது ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி தினந்தோறும் எழுத வேண்டும். அது வெளியீட்டிற்காக அல்ல. அது தன்னுடைய குழந்தைகள், மற்றும் சந்ததியினர் தங்களது முன்னோர்கள் எந்த சூழ்நிலைகளில் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிய உதவும் என்றார்.
அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் தனது வாழ்த்துரையில் வரலாற்றை படிக்கும் மாணவர்களுக்கு எந்தெந்த துறைகளிலெல்லாம் வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன என்பதை விளக்கமாக விவரித்தார். குறிப்பாக அருங்காட்சியகத் துறை, தொல்லியல் துறை, புராதான சின்னங்களைப் பாதுகாக்கும் துறை, இதுபோன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றார். எனவே வரலாறுபடிக்கும் மாணவர்கள் சீரிய முறையிலும் ஆர்வத்துடனும் ஆழமாகவும் வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கொடைக்கானல் மதர்தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜானகி, முனைவர் என்.ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் கருணாநந்தம், தலைவர், வரலாற்றுப் பேரவை, மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.ஜெகதீசன், ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக வரலாற்றுத் துறை பேராசிரியர் (பொ) முனைவர் கே.கிரு~;ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார். முனைவர் ஜி.பரந்தாமன் உதவிப் பேராசிரியர் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2025
08 May 2025 -
சென்னை விமானநிலையத்தில் 10 விமானங்கள் ரத்து
08 May 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
தொடர்ந்து விழிப்போடு இருங்கள்: பல்வேறு துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, மாநில அதிகாரிகள், கள நிறுவனங்களுடன் இணைந்து நெருங்கிய ஒத்துழைப்பை பேண வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்: துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு
08 May 2025சென்னை, தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
பழனிசாமியின் கபட நாடகங்கள் ஒருநாளும் வெற்றி பெறாது: ஆர்.எஸ்.பாரதி பதிலடி
08 May 2025சென்னை, தி.மு.க.
-
தமிழகத்தில் பிளஸ்-2 ரிசல்ட் வெளியீடு: அரியலூர் மாவட்டம் முதல் இடம்
08 May 2025சென்னை, தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
08 May 2025அமிர்தசரஸ், இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு முழு ஆதரவு..!
08 May 2025புதுடெல்லி, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
-
ஸ்ரீநகர் உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களில் பாகிஸ்தான நடத்த இருந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா
08 May 2025புதுடெல்லி: ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர் உள்ளிட்ட இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
08 May 2025சென்னை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
இந்தியா-பாக். போர் பதற்றம்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
08 May 2025இஸ்லாமாபாத், அமெரிக்க துணைத் தூதரகம் அனைத்து தூதரக ஊழியர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்
08 May 2025மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51 மணியளவில் நடைபெற்
-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் 98.5 சதவீதம் தேர்ச்சி
08 May 2025புதுச்சேரி, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி விழுக்காடு 98.5 சதவீதமாகும். இம்முறை அரசுப் பள்ளிகள் சி.பி.எஸ்.இ.
-
தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்வு
08 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே.8) தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனையானது.
-
பா.ம.க. மாநாட்டிற்கு எதிரான மனு: சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி
08 May 2025சென்னை, பா.ம.க. மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் * 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்கள் * தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 May 2025திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் மற்றும் 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்க
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் முக்கிய தீவிரவாதி உயிரிழப்பு
08 May 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் செயல்பாட்டுத் தலைவரான அப்துல் ரவூப் அசார் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாராளுமன்றத்தை கூட்ட ராகுல் காந்தி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, பாராளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அரியலூர் மாவட்டம் முதலிடம்
08 May 2025சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நேற்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.
-
கேளிக்கை வரி மசோதாவுக்கு தமிழ்நாடு கவர்னர் ஒப்புதல்
08 May 2025சென்னை, கேளிக்கை வரி மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
பாக். தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலி
08 May 2025ஸ்ரீநகர், பூஞ்சில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
-
சென்னை வெற்றியால் நெருக்கடி: பிளே ஆப்-க்கு முன்னேறுமா கொல்கத்தா?
08 May 2025கொல்கத்தா, சென்னை வெற்றியால் கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை வெற்றி...
-
பாக். ஏவுகணையை இடைமறித்து அழித்த இந்தியா
08 May 2025புதுடெல்லி, பஞ்சாப்பில் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது.
-
ரூ.2 ஆயிரம் கோடி பத்திரங்கள் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு
08 May 2025சென்னை, தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2,000 கோடி மதிப்பில் 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி மற்றும் 15 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி ஏ
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100 பயங்கரவாதிகள் பலி: ராஜ்நாத்சிங்
08 May 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.