எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்.- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ர்சி மன்ற கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம். முன்னிலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தது அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் அரசு முதன்மை செயலாளர்(திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி மற்றும் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்) எஸ். கிருஷ்ணன், தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர்(திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி மற்றும் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்) தெரிவிக்கையில்,
தமிழக அரசு தமிழகத்தை டெங்கு இல்லா மாநிலமாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் தொடர்நடவடிக்கையின் மூலம் டெங்கு பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டமாக திகழ்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும்; ஏடிஸ் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், வாரந்தோறும், ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதனை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுசமயம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர் பள்ளி இறைவணக்கத்தின் போது காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுகாதார உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் இதரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் நில வேம்பு கசாயம், உப்புக் கரைசல் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உள்நோயாளிகளுக்கு சாப்பாட்டு கஞ்சி சேர்த்து வழங்கப்படுகிறது.
ஏடிஎஸ் கொசுக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை தினசரி கழுவி சுத்தம் செய்து பயன்படுத்துவுடன் கொசுக்கள் உள்ளே புகா வண்ணம் மூடி வைத்திடுவது, தங்கள் வீட்டின் வெளியிலும், சுற்றுப்புறத்திலும் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வதோடு தேவையற்ற மண்பாண்டங்கள், உரல்கள், பழைய பாட்டில்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வது, வீட்டில் உள்ள கீழ் நிலை நீர் சேமிக்கும் தொட்டியை மூடுவது, போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
வைரஸ் காய்ச்சல் நோய் குறித்து எந்தவித அச்சமும், பயமும் கொள்ளத் தேவையில்லை என்றும், அனைத்து காய்ச்சல் வகைகளையும் ஆரம்ப காலத்திலேயே கண்டறியப்பட்டால், முற்றிலுமாக குணப்படுத்த முடியும். காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்கள் தன்னிச்சையாக எவ்வித மருத்துவமும் மேற்கொள்ளாமல் காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சென்று உரிய சிகிச்சைப் பெறவும். மேலும், கொசு ஒழிப்பு பணிக்கென தங்கள் வீடுகளை நாடி வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும்.
வடகிழக்கு பருவழையானது இந்தாண்டு டிசம்பர் மாதம் இறுதிவரை பெய்வதற்க்கான வாய்ப்பு உள்ளதால். மழைநீர் வீணாகாத வண்ணம் கண்மாய்கள், ஓடைகள், வரத்துக்கால்வாய்களை தூய்மைப்படுத்தி மழைநீரை சேகரிப்பதற்கான நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும். பொதுப்பணித்துறையினர் கண்மாய் உடைப்பு ஏற்பட்டால் சரிசெய்வதற்கான மணல் மூடைகள் மூங்கில் கம்புகள் ஆகியவற்றை அருகில் உள்ள பண்ணை உரிமையாளர்களின் உதவியுடன் பண்ணைகளிலேயே சேமித்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் தங்களிடம் உள்ள பவர்ஷா மற்றும் கட்டர் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை தயாராக வைத் ்க வேண்டும். அதிகளவில் மழைபெய்து வருவதால் மழைநீரினை சேமித்து பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி தினசரி வழங்குவதற்கு நகராட்சி துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வேளாண்மை துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பயிர் சாகுபடி பரப்பு கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகரித்துள்ளது. வேளாண் இடுபொருட்கள் பொதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளை அதிக அளவில் சேர்ப்பதற்கு எளிமையான வழிமுறைகளை ஏற்படுத்த வேளாண்மைதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர்ப்டிப்பகுதி மற்றும் வரத்துக்கால்வாய் பகுதிகளில் உள்ள கருவேலம் செடிகளை அகற்றுவதற்காக உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எந்த பகுதியிலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவரின் பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். மேலும், கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என அரசு முதன்மை செயலாளர் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி மற்றும் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்) அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, அரசு முதன்மை செயலாளர்(திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி மற்றும் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்) அவர்கள் வடமலாபுரம், நமஸ்கிரித்தான்பட்டி ஆகிய கிராமங்களில் வீடுவீடாகச் சென்று குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளத, அசுத்தமாக உள்ளதா எனவும், எம்.புதுப்பட்டி மற்றும் கன்னிச்சேரிபுதூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமான படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா எனவும், விருதுநகர் தலைமை அரசு மருத்துவமனையில் இரத்த பகுப்பான் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துக்குமரன், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் தி.திலகவதி, இணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.மனோகரன், துணை இயக்குநர்கள் மரு.எ.ராம்கணேஷ், மரு.பழனிச்சாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) காதர்மீர் உட்பட பல்வேறு அரசுத் துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 44 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி முயற்சி: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
16 May 2024லக்னோ, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் முயற்சித்தன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&nbs
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
16 May 2024சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்
-
பெண் எம்.பி மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
16 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார
-
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்
16 May 2024சென்னை, சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவ
-
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு: வரும் 19-ம் தேதி தொடங்க திட்டம்
16 May 2024நாகை, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
நிலவில் கால்பதிக்கும் இந்தியா: கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள்: வைரலாகும் பாக். எம்.பி.யின் பேச்சு
16 May 2024இஸ்லாமாபாத், இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது என அந்நாட்டு எம்.பி.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
கொடைக்கானலில் இன்று முதல் 61-வது மலர் கண்காட்சி துவக்கம்: ஒரு கோடி மலர்களால் பூத்துக்குலுங்கும் பிரையண்ட் பூங்கா
16 May 2024கொடைக்கானல், கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகின்றது. பிரையண்ட் பூங்காவில் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
-
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
16 May 2024சென்னை, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நரம்பியல்துறைக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ. 65 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.