எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரும்பு பயிர் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்துள்ளது. விவசாயிகளுக்கு லாபகரமானதும், அதிக பிரச்சினை இல்லாததுமான பயிராக கரும்பு விளங்குகிறது. கரும்பின் முக்கிய விளை பொருளான சக்கரை உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. சர்க்கரை நுகர்வில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு 2.5 கோடி டன்கள் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் சராசரி கரும்பு மகசூல் ஏக்கருக்கு 28 டன்களாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த 2015-16ல் - 41 டன்களாக இருந்தது. இந்திய அளவில் தமிழகம் மகசூல் திறனில் முதலிடம் வகிக்கிறது. ஆனால் பெரு, கொலம்பியா ஆகிய நாடுகளின் சராசரி மகசூல் 50 டன்களாக உள்ளது.
எனவே, அத்தியாவசிய உணவுப் பொருளாக சர்க்கரை இருப்பதால் தொடர்ந்து சர்க்கரை உற்பத்தியை அதிகரிக்கவும், தேவையை ஈடுகட்டவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரும்பு உற்பத்தி திறனில் முந்தைய ஆண்டுகளில் தமிழகம் உலகிலேயே முதலிடம் வகித்தாலும், கடந்த பல ஆண்டுகளாக உற்பத்தி திறனில் எக்டருக்கு போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. கரும்பின் அதிகபட்ச உற்பத்தித் திறன் ஏக்கருக்கு 132 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சராசரி மகசூல் திறனை மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரும்பில் புதிய இரகங்கள் அறிமுகம், அதிக இடைவெளியில் நடவு, சொட்டு நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் நவீன உத்தியாக அறிமுகம் செய்யப்பட்டதுதான் செம்மைகரும்பு சாகுபடி எனப்படும் ஒரு விதைப் பருசீவல் நாற்று முறையாகும். இது நீடித்த நவீன கரும்பு சாகுபடி என்றும் கூறப்படுகிறது.
நீடித்த நவீன கரும்பு சாகுபடி (ளுளுஐ) ஃ கரும்பு நாற்று நடவு முறை
வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் இருபருக்கரும்பு கரணைகளை நடுகிறார்கள். இதிலிருந்து 60 ஆயிரம் கரும்பு பயிர்கள் தோன்றி, ஒரு கணுவுக்கு 2 கரும்புகள் விளைந்து அதில் ஒரு கரும்பு ஒரு கிலோ எடை எனக் கணக்கிட்டால் ஏக்கருக்கு 120 டன் கரும்பு மகசூல் கிடைக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இதில் 3-ல் ஒரு பங்கு மகசூல் தான் கிடைக்கிறது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், போதிய பயிர் எண்ணிக்கை இல்லாததுதான் முக்கிய குறைபாடாகக் கருதப்படுகிறது. இந்த நவீன கரும்பு நாற்று முறை மூலம் இந்த குறைபாடு தவிர்க்கப்படுகிறது.
இம்முறையின் மூலம் விதை நாற்றுகள் மற்றும் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி சரியான அளவு ஊட்டச்சத்து மற்றும் பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெறலாம்.
கடந்த 6 ஆண்டுகளாக கரும்பு நாற்றங்கால் அமைத்து ஈரோடு மாவட்டம் மட்டுமன்றி மேட்டூர், கொளத்தூர் போன்ற இடங்களுக்கு லட்சக் கணக்கில் கரும்பு நாற்று விநியோகம் செய்து வரும் கோபி வட்டாரம் பா.வெள்ளாளபாளையம் - குளவிக்கரடு பகுதியைச் சேர்ந்த வெங்கிடுசாமி என்ற முன்னோடி விவசாயி இது குறித்துத் தெரிவித்ததாவது
நான் பல ஆண்டுகளாக கரும்பு கரணையிலிருந்து நாற்றுகளை உற்பத்தி செய்யும் நாற்றங்காலை அமைத்து, கரும்பு நாற்றுக்களை விவசாயிகளுக்கு விநியோகித்து வருகிறேன். ஒரு ஆண்டுக்கு 60 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் நாற்றுக்களை உற்பத்தி செய்கிறேன். நிழல் வலைக் கூடம் அமைத்து நன்கு பயிற்சி பெற்றவர்களைக் கொண்டுதான் இந்த நாற்றுக்களை உற்பத்தி செய்ய முடியும். ஒரு நாற்றுக்கு 1.60 ரூபாய் வசூலிக்கிறேன். இது தவிர போக்குவரத்து செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும். கரணையாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் எண்ணிக்கை வேண்டும். ஆனால் இந்த முறையில் 5 முதல் 6 ஆயிரம் நாற்றுகள் போதுமானது. பார்களில் 5 அடி இடைவெளி தேவை.
இந்த முறையில் கரும்பு கரணையில் உள்ள பருக்கள் வெட்டுக் கருவி மூலம் அப்படியே சீவி எடுக்கப்பட்டு, தேங்காய் நார்க்கழிவுகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் டிரேக்களில் ஊன்றப்பட்டு, பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது. 25 முதல் 30 நாட்கள் ஆனதும் 4 முதல் 6 இலைகள் வளர்ந்திருக்கும். சாதாரணமுறையில் 2 மாதங்களில் கிடைக்கும் வளர்ச்சி - இந்த முறையில் ஒரே மாதத்தில் கிடைத்துவிடுகிறது. இந்த நிலையில் நன்கு வளர்ந்துள்ள பயிர்களை எடுத்து நடவு செய்து விடலாம். இதன் மூலம் குறைந்த நாட்களில் அதிக அளவு முளைப்புதிறன் கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 100 டன்கள் வரை மகசூல் எடுக்க வாய்ப்புள்ளது” - என்று கூறினார்.
இந்தப் புதிய முறை நாற்று உற்பத்தி குறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்ததாவது, ‘ ஒரு பரு கரும்பு சீவல்களிலிருந்து நாற்றங்கால் அமைத்து, நாற்றுக்களைப் பாதுகாப்பாக வளர்த்து, நடவு செய்யும் இம்முறை கரும்பு உற்பத்தியில் பெரும் புரட்சியை உருவாக்கியுள்ளது. சாதாரண முறையில் ஒரு ஏக்கருக்கு 60 ஆயிரம் விதைப் பருக்கள் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக இந்தப்புதிய முறையில் 5 ஆயிரம் நாற்றுகள் மட்டுமே நடவு செய்யப்படுகிறது. அதிக இடைவெளியில் நடப்படுவதால் காற்றும், சூரிய ஒளியும் பயிர்களுக்கு இடையில் நன்கு ஊடுருவுகிறது. ஒருபார் விட்டு ஒரு பார் நீர் பாய்ச்சுதல் மற்றும் சொட்டுநீர்ப்பாசனம் போன்ற உத்திகளை இதில் பயன்படுத்துவதால் 40 சதம் பாசன நீர் சேமிக்கப்படுகிறது. பார்களின் இடைவெளியில் ஊடுபயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், களைகளையும் கட்டுப்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு விதைக் கரணைகள் 4 டன்களுக்குப் பதிலாக, இந்தப் புதிய முறையில் விதை சீவல்களின் எடை வெறும் 50 கிலோ என்பதால் விதைக் கரணைகளுக்கான போக்குவரத்து செலவும் பிற நடைமுறைகளும் வெகுவாகக் குறைகிறது. ஒரு பயிரிலிருந்து 15 முதல் 20 கிளைப்புகள் தோன்றுவதால் மகசூல் இரட்டிப்பாக வாய்ப்பு ஏற்படுகிறது. நடப்பு மார்கழி தைப்பட்டத்திற்கு கோ 86032, கோ 99004, கோ 94008, கோகு 94077 ஆகிய இரகங்களை சாகுபடி செய்யலாம். இதில் கோ 86032 இரகம் சிறந்ததாக கருதப்படுகிறது. தமிழக மொத்த கரும்பு சாகுபடிப் பரப்பில் 79 சதம் பரப்பளவில் இந்த கோ 86032 இரகம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், ஒரு பரு சீவல் நாற்றுக்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிழல் வலைக் கூடங்கள் அமைக்கவும் பருவெட்டும் கருவி உள்ளிட்ட உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் 50 சத மானியமாக 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு பரு கரும்பு நாற்றுகள் நடுவதற்கு ஏக்கருக்கு 4500 ரூபாய் மானியமும், இந்த வயல்களில் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் அமைப்பதற்கு சிறு விவசாயிகளுக்கு அதிக பட்சம் 2 லட்சம் ரூபாய் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து மேலும் விவரங்களை அறிய கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.” - என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,