முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவாமி விவேகானந்தர் திருஉருவ படத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் மலர் தூவி மரியாதை

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: சுவாமி விவேகானந்தரின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் விவேகானந்தரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சுவாமி விவேகானந்தரின் 155 பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இளைஞர்களின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த அவர் சொன்ன 'நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள், இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்' என்று அவர் சொன்ன வாக்கியம் மிகப்பிரபலம்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர் சக்தி மிகவும் முக்கியம் என்று எடுத்துரைத்த அவரது பிறந்தநாள் நாடு முழுவதும் கடந்த 1984ம் ஆண்டில் இருந்து தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 'இன்றைய தினம் நாம் அனைவரும் சுவாமி விவேகானந்தரை நினைவுகூரவேண்டும். அவர் போற்றத்தக்க ஒரு அறிஞர், துறவி மற்றும் தேசத்தை உருவாக்கியவர். தேசிய இளைஞர் தின வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டு உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். தேசிய இளைஞர் தினமான இன்று, புதிய இந்தியாவை கட்டமைக்கும் இளைஞர்களின் ஆற்றல் மற்றும் உற்சாகத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன்' என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து