முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான், ஜலாலாபாத்தில் தொண்டு நிறுவனம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் 11 பேர் காயம்

புதன்கிழமை, 24 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

காபுல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் உள்ள சேவ் தீ சில்ட்ரன் அமைப்பின் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்கொலைப்படை ...
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் ஜலாலாபாத் நகரம் உள்ளது. இந்த நகரில் சேவ் தீ சில்ட்ரன் எனப்படும் சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு தொண்டு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் வெளியே நேற்று சில தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் சுமார் 11 பேர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியன.

பொறுப்பேற்கவில்லை...
இதையடுத்து அப்பகுதிக்கு ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து