முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகம் தொடர்ந்து எதிர்க்கும்: சித்தராமையா

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூர் :  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகம் தொடர்ந்து எதிர்க்கும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,  காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்ற கர்நாடகத்தின் வாதத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைக் கர்நாடகம் தொடர்ந்து எதிர்க்கும். அதற்கான பணி மத்திய அரசுக்கு உரியது என்று சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

அதன்படி, காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் கருத்தறிந்த பிறகே, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசால் அமைக்க வேண்டியிருக்கும். எதுவாக இருந்தாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடக அரசு விரும்பவில்லை.

தேர்தலில் போட்டியிடுவோர் சொத்து விவரங்களை, வருமானத்தின் மூலத்தை தெரிவிக்கவேண்டும் என்ற நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து முழுமையான தகவல் என்னிடம் இல்லை. அது எப்படி இருந்தாலும், சொத்து விவரங்கள் மற்றும் வருவாய் மூலத்தை தெரிவிக்க வேண்டுமென்ற நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றுவதில் தவறில்லையே. அதனால் நமக்கு என்ன தீமை விளைந்து விடப் போகிறது? என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து