எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாஹீர் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி சையதுகான், நகர செயலாளர் என்.வி.ராதா, ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து வரவேற்றார். அன்வர்ராஜா எம்.பி, தலைமை கழக பேச்சாளர் நேதாஜிபாபு, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை முன்னாள் செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வழக்கறிஞர் சந்திரசேகரன் பேசும்போது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1984ம் ஆண்டு பாராளுமன்றத்தில்; அண்ணா அமர்ந்த இருக்கையில் அமர்ந்து தனது கன்னி பேச்சால் அனைவரின் பாராட்டை பெற்றார். 1989ம் ஆண்டு போடிநாயக்கனூர் தொகுதியில் வெற்றிபெற்று எதிர்கட்சி தலைவரானார். 1991, 2001 மற்றும் 2011 முதல் தன் வாழ்நாள் முழுவதும் முதல்வராக இருந்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார் என்றார்.
ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பேசும்போது மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை முழங்கிய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதனடிப்படையில் மக்களின் வாழ்வாதாரம் சிறக்க ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார். மேலும் தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்து பெண்சிசு கொலையை தடுத்து நிறுத்தினார். இத்திட்டத்தில் சேர்ந்த முதல் குழந்தை தற்போது பொறியாளர் படிப்பு படித்து நல்ல பணியில் உள்ளார். முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த ஆணை பெற்று தந்தார். மேலும் 152 அடியாக உயர்த்த முயற்சி மேற்கொண்டார். காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வைத்தார். காங்கிரஸ் அமைத்த மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தேவையான துறைகளை கேட்காமல் வருமானம் கொழிக்கும் துறைகளை கேட்டனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கபட்டபோது சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு என்று கூறியவர்கள் தற்போது அவர் மருத்துவமனையில் சேர்க்கும்போதே சுயநினைவு இன்றியே இருந்தார் என்று கூறியுள்ளனர். இந்த பொய்யை சொல்ல சொன்னவர்கள் யார்? எனக்கு துரோகம் செய்தவர்கள் என்று சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை வெளியேற்றினார் புரட்சித்தலைவி அம்மா. அதன் பின் தனது குடும்பத்தினர் செய்த துரோகம் எனக்கு தெரியாது என்றும், பதவிக்கு ஆசைப்படமாட்டேன் என்று எழுதி கொடுத்து திரும்பியவர் சசிகலா. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது 70 நாட்களாக மருத்துவமனை முன்பாக இருந்த தொண்டர்கள் மற்றும் 7 கோடி தமிழக மக்களுக்கு புரட்சித்தலைவி அம்மா சிகிச்சைபெற்ற ஒரு போட்டோவை கூட காட்டாதவர்கள் ஒரு தொகுதியில் ஜெயிக்க சிகிச்சை வீடியோவை வெளியிட்டு தொண்டர்களின் எண்ணங்களை குழிதோண்டி புதைத்துள்ளனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய நமது இயக்கத்தை 40 நாட்களில் அபகரிக்க நினைத்த இவர்களால் நமது இயக்கத்தின் ஒரு செங்கலை கூட உருவ முடியாது என்றும், நமது இயக்கத்தை ஒரு வலிமையான இயக்கமாக கொண்டு செல்வோம் என்றார். ஏர்செல்ரபீக் அகமது நன்றி கூறினார். இக்கூட்டத்தில் தேனி நகர செயலாளர் முருகேசன், பெரியகுளம் நகர துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் நாராயணன், இயக்குநர்கள் அன்பு, பிரேமாராஜேந்திரன், சேகர், தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சந்தோஷம், கோவில் சிவக்குமார், வி.டி.எஸ்.ராஜவேல், வார்டு செயலாளர்கள் காஜாமுயுனுதீன், தவமணி, சிவக்குமார், முத்துப்பாண்டி மற்றும் மகளிர் அணியினர், ஏராளமான தொண்டாகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்