முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலைபேசி மூலம் மிரட்டல்கள்: காங். மூத்த தலைவர் புகார்

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவைத் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, தனக்கு தொலைபேசியில் மிரட்டல்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இப்பிரச்சனையை நான் மக்களவை சபாயநகர் சுமித்ரா மகாஜன் மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் கொண்டு சென்றுள்ளேன். இந்த தொலைபேசி மிரட்டல் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள துக்ளக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என்று தெரிவித்தார். எனினும், காங்கிரஸ் தலைவர் தனக்கு வந்த அச்சுறுத்தல்களின் தன்மையைப் பற்றி விரிவாக பேசவில்லை.

மேலும் விசாரணை மேற்கொள்ள இடையூறாய் அமைந்து விடும் என்ற காரணத்தினாலேயே நான் இதுகுறித்து விரிவாகப் பேசுவதைத் தவிர்த்து விட்டேன். மேலும் இதை நான் அரசியல் ஆதாயத்திற்காக சொல்கிறேன் என மக்கள் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். என்னை பேச விடாமல் செய்யவும், நான் செயல்படுவதை நிறுத்தவும்தான் சிலர் இப்படிப்பட்ட வேலைகளில் இறங்கியுள்ளார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.

என்னுடைய ஆறு வயதில் எங்கள் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் என் பெற்றோர்களும் உறவினர்களும் கொல்லப்பட்டபோதே நானும் இறந்திருக்க வேண்டியது. தற்போது என் வயது 76. எனவே, கூடுதலாகக் கிடைத்த 70 ஆண்டுகளும் எனக்கு போனஸ் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து