எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, இசையமைப்பாளர் இளையராஜா, ஹிந்துஸ்தானி பாடகர் குலாம் முஸ்தபா கான், ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவ ரான பி.பரமேஸ்வரன் உள்ளிட்ட 43 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வழங்கினார்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம், குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஆண்டும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்ம பூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும் என கடந்த ஜனவரி 25-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இசையமைப்பாளர் இளையராஜா உட்பட 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதும் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் ராமச்சந்திர நாகசாமி உட்பட 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழக நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டன.
இந்த விருதுகள் 2 பிரிவாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மார்ச் 20-ம் தேதி 43 பேருக்கும், ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறும் விழாவில் மீதமுள்ளவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந் தது.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பிரபலமானவர்களுக்கும், பலரால் அறியப்படாத கலைஞர்களுக்கும் சமூக சேவை செய்து வருபவர்களுக்கும் வழங்கப்பட்டன. ஏழை மக்களின் நலனுக்காக பாடுபட்டவர்கள், இலவசப் பள்ளிகளை ஏற்படுத்தியவர்கள், உலக அளவில் பழங்குடியினர் கலைகளை பிரபலப்படுத்தியவர்கள் என பலர் பத்ம விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் 43 பேருக்கு பத்ம விருதுகள் வழங் கும் விழா நடைபெற்றது. முதலில் 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெறுபவர்களில் முதல் நபராக இசையமைப்பாளர் இளையராஜா பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து ஹிந்துஸ்தானி பாட கர் குலாம் முஸ்தபா கான், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பி. பரமேஸ்வரன் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து 4 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. கேரளாவைச் சேர்ந்த பேராயர் பிலிப்போஸ்மர் கிறிசோஸ்தம், வரலாற்று ஆய்வாளர் டாக்டர் ராமச்சந்திர நாகசாமி, சட்ட வல்லுநர் வேத் பிரகாஷ் நந்தா, ஹிந்துஸ்தானி இசைக் கலைஞரும் சிதார் இசைக்கலைஞருமான பண்டிட் அரவிந்த் பாரிக் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
இதன் பின்னர் பத்மஸ்ரீ விருது கள் வழங்கப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட மூலிகை மருந்துகளைத் தயார் செய்து ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் கேரளாவைச் சேர்ந்த லஷ்மிக்குட்டி, ஓவியக் கலைஞர் பஜ்ஜு ஷியாம், பேராசிரியர் அரவிந்த் குமார் குப்தா, டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், மேற்கு வங்கத்தில் ஏழை மக்களுக் காக மருத்துவமனை கட்டி உதவி வரும் கூலித் தொழி லாளி சுபாஷிணி மிஸ்திரி, எழுத்தாளர் அரூப் குமார் தத்தா, பிளாஸ்டிக் சாலை அமைத்து முன்னோடியாக திகழும் தமிழகத்தின் ராஜகோபாலன் வாசுதேவன், காஷ்மீரைச் சேர்ந்த நாடகக் கலைஞர் பிரான் கிஷோர் கவுல், கர்நாடகாவில் மருத்துவச் சேவை செய்து வரும் சுலகட்டி நரசம்மா உள்ளிட் டோர் பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவரிடமிருந்துபெற்றுக் கொண்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த யோகா ஆசிரியர் நானம்மாள் சக்கர நாற்காலியில் வந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்றுக்கொண்டார். 80 ஆண்டுகளுக்கும் மேலாக நாள் தவறாது யோகா பயிற்சி செய்வதுடன், 600-க்கும் மேற்பட்ட யோகா மாஸ்டர்களை உருவாக்கியவர் 98 வயது நானம் மாள் என்பது குறிப்பிடத் தக்கது.
நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர் எல். கே. அத்வானி, மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 19 hours ago |
மினி பான் கேக்1 week 15 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
07 May 2024 -
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் பேட்டி
07 May 2024நெல்லை : அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும் என்று தன்னை தாக்கியவர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் தெரிவித்தார்.
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.