எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனே: புனேயில் நடைபெற்ற 27வது ஐபிஎல் போட்டியில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரோஹித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 11 ஓவர்களில் 97/1 என்ற சிறப்புக்கட்டத்திலிருந்து 20 ஒவர்களில் 169/5 என்று சரிந்தது. பிறகு இலக்கைத் துரத்திய மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா (56), சூரியகுமார் யாதவ் (44), எவின் லூயிஸ் (47) ஆகியோரது ஆதிக்கத்தினால் 170/2 என்று வெற்றி பெற்றது.
சுரேஷ் ரெய்னா தொடக்க ஷார்ட் பிட்ச் சோதனைகளைக் கடந்து வந்து 47 பந்துகளில் 75 ரன்கள் என்று இறுதி வரை நின்ற போதும் சென்னை எப்படி 185-190 ரன்களை எட்டாமல் போனது என்பது புரியாத புதிர்! தோனி மீண்டும் வைடான யார்க்கர் முயற்சி புல்டாஸை நீட்டிக் கொண்டு அடிக்க கவரில் எவின் லூயிஸ் கையில் போய் விழுந்தது, இது ஒரு திருப்புமுனை என்றால் மெக்லினாகன் இதே ஓவரில் பிராவோவுக்கு ஒரு ஏத்து ஏத்த பாயிண்டில் முடிந்தார், டக் அவுட்.
இந்த இரண்டு விக்கெட்டுகளினால் 143/2 என்று இருந்த சென்னை 144/4 என்று ஆனது.
அன்று பவன் நெகியிடம் எப்படி விக்கெட் கொடுக்க மனம் வந்ததோ ஷேன் வாட்சனுக்கு நேற்று 1 பவுண்டரியுடன் 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து 5வது ஓவரின் 2வது பந்தில் குருணால் பாண்டியா பந்தை ஸ்கொயர்லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், தொடக்கத்தில் ஜஸ்பிரீத் பும்ரா தன் பவுன்ஸ் மூலம் அம்பாத்தி ராயுடுவின் பேட்டிங் தரத்தை சோதித்தார். ஆனால் பும்ராவை பிறகு வீசுவதற்காக உடனே கட் செய்தார் ரோஹித் சர்மா, ஒருவேளை தொடர்ந்து கொடுத்திருந்தால் வேறு ஒரு தரநிலை பவுலிங்கிற்கு எதிரான ராயுடுவின் பலம் தெரிந்திருக்கும், அவுட் கூட ஆகியிருப்பார்.
ஆனால் அதன் பிறகு ராயுடு அற்புதமாக ஆடினார், அப்படித்தான் அவர் ஆடி வருகிறார். பாண்டியா உண்மையில் நன்றாகவே வீசினார், பவர் ப்ளேயில் அவரது சிக்கன விகிதம் ஓவருக்கு 10 ரன்கள் என்றாலும் ரோஹித் அவரைக் கொண்டுவந்தார். 4 பந்துகள் 2 ரன்கள்தான், ஆனால் கடைசியில் ஒரு கூடுதல் பவுன்ஸ் கொண்ட பந்துக்கு எட்ஜ் பவுண்டரி ஒன்றையும் கடைசியில் மிக அருமையாக புல் லெந்த் பந்தை லாங் ஆஃப் மேல் சிக்ஸரும் அடிக்க ஸ்கோர் 6 ஓவர்களில் 51/1 என்று இருந்தது. முன்னதாக குருணால் பாண்டியாவையும் ஒரு பிளிக் சிக்ஸ் அடித்திருந்தார் ராயுடு, ரெய்னா இறங்கி தன் பாணியில் ஒரு குறுக்குசால் ஓட்டி மிட்விக்கெட்டில் குருணாலை ஒரு சிக்ஸ் அடித்திருந்தார்.
ரெய்னாவுக்கு கடும் ஷார்ட் பிட்ச் சோதனை கொடுக்கப்பட்டது, அருகில் 3 பீல்டர்களை நிறுத்தி அவரை குதிக்க வைத்தனர். ஆனாலும் நேராக அவரது உடலுக்கு ஷார்ட் பிட்ச் வீசவில்லை. இதனால் ஷார்ட் பைன் லெக் தாண்டி 2 பவுண்டரி அடித்தார், ஷார்ட் பிட்ச் சரியாக வீசத் தெரியவில்லை அல்லது நேற்று அமையவில்லை, இதனால் ரெய்னா செட்டில் ஆகி தனக்குச் சாதகமான, தூக்கத்தில் எழுந்து அடிக்கச் சொன்னால் கூட அடிக்கும் லாங் ஆன் மிட்விக்கெட் பகுதிகளில் ஒரு 40 ரன்கள் பக்கம் அடித்தார். மயங்க் மார்க்கண்டேயை ரெய்னா நேராக ஒரு பவுண்டரி பிறகு ஏறி வந்து லாங் ஆனில் ஒரு சிக்ஸ் விளாசினார். முதல் ஓவரில் 3 ரன்கள் கொடுத்த மார்க்கண்டே இந்த ஓவரில் 14 ரன்கள் கொடுத்தார். 10 ஓவர்களில் 91/1 என்று இருந்த போது ரெய்னா 17 பந்துகள்ல் 31 என்றும் ராயுடு 32 பந்துகளில் 45 என்றும் இருந்தனர்.
அதன் பிறகு மும்பை நடுஓவர்களை இறுக்கிப் பிடித்தது. ராயுடு 46 ரன்களில் குருணால் பாண்டியா பந்தை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 11வது ஓவரில் 6 ரன்கள், 12 வது ஓவரில் ராயுடு விக்கெட்டுடன் 2 ரன்கள், 13வது ஓவரில் பும்ரா அபாரமாக வீச தோனி, ரெய்னா இருந்தும் 1 ரன் மட்டுமே வந்தது. மீண்டும் 14வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே. 15வது ஓவரில்தான் தோனியிடம் சிக்கினார் பாண்டியா, லாங் ஆஃபில் பந்து நசுங்கிவிடும் போல் ஒரு அறை, பிறகு அசட்டுத்தனமாக தோனிக்கு ஒரு ஷார்ட் பிட்ச் முயற்சி செய்ய மிட்விக்கெட்டில் விளாசினார்.
மயங்க் மார்க்கண்டே ஓவரில் தோனிக்கு ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பை இஷான் கிஷன் விட்டார்.. (உஷ்!) மறுபடியும் கிரிக்கெட்டின் எழுதப்படாத விதியின் படி கேட்ச் விட்டாலோ, ஸ்டம்பிங் விட்டாலோ என்ன ஆகும், தோனி அடுத்த பந்தை ஒரு ஸ்டெப் எடுத்து வைத்து லாங் ஆன் ஸ்டாண்ட்சுக்கு அனுப்பினார். அடுத்த ஓவரில் ரெய்னா பும்ராவின் இரண்டு மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 35 பந்துகளில் அரைசதம் கண்டார்.
மெக்லினாகன் திருப்பு முனை ஓவர்:
17 ஓவர்கள் முடிவில் 143/2. ரெய்னா, தோனி என்ற இறுதி ஓவர் விளாசல் ஜோடி களத்தில், ஆனால் மெக்லினாகன் வேறு சில யோசனைகளைத் தன் வசம் வைத்திருந்தார்.
18வது ஓவரில் தோனிக்கு அனைவரும் செய்யும் வைடு ஆஃப் திசை பந்தை வீசினார், இம்முறை இது புல்டாஸ், தோனி நீட்டிக்கொண்டு அடித்தார் டீப் கவரில் கேட்ச் ஆகி 26 ரன்களில் வெளியேறினார்
ரெய்னா ஒரு ரன் எடுத்து பிராவோவிடம் ஸ்ட்ரைக் கொடுக்க மெக்லினாகன் கூடுதல் பவுன்ஸ் செய்தார், பிராவோவின் புல்ஷாட் மார்க்கண்டேயிடம் லெக் சைடில் கேட்ச் ஆனது, டக் அவுட் ஆனார் பிராவோ. கடைசியில் பும்ரா ஷார்ட் பிட்ச்சை ரெய்னா ஒரு சிக்சர், மீண்டும் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியாவின் கடைசி பந்தில் இன்னொரு சிக்சரை ரெய்னா அடிக்க சென்னை அணி 169/5 என்று முடிந்தது. ரெய்னா 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 75 நாட் அவுட்.
ரோஹித், சூரியகுமார் யாதவ் அபாரம்:
காட்டடி மன்னன் எவின் லூயிஸ் சரியாக ஆடவில்லை, அவரது பேட்டிங் எடுபடவில்லை. 26 பந்துகளில் 21 ரன்களை எடுத்தார், ஆனால் அவருக்கென்றே வந்து சிக்கிய இம்ரான் தாஹிரை கவரில் ஒரு அரக்க சிக்சரையும் அதேஓவரில் லாங் ஆனில் பந்து இறங்குமா என்ற சந்தேகம் எழுமாறு இன்னொரு சிக்சரையும் அடித்தார் லூயிஸ்.
அடுத்த வாட்சன் ஓவரில் ரோஹித் சர்மா லாங் ஆஃபில் ஒரு கையில் சிக்ஸ் அடித்தார். அவரது பாட்டம் ஹேண்ட், மட்டையின் பவர் ஆகியவற்றினால் சிக்ஸ் ஆனது. பிறகு வாட்சனை ஸ்வீப் சிக்ஸ். இது ஸ்வீட் சிக்ஸ்.
முன்னதாக சூரிய குமார் யாதவ், எவின் லூயிஸ் திணறலுக்கு ஈடு கட்டி தனது அபாரமான பார்மைத் தொடர்ந்து பயன்படுத்தி 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 44 ரன்கள் விளாசி ஹர்பஜன் பந்தை புல் ஷாட் ஆட ஜடேஜா இடது புறம் ஓடி பிறகு டைவ் அடித்து கிளாஸ் கேட்சை எடுக்க ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் 71/1 என்று நல்ல நிலையில் இருந்தது மும்பை.
அதன் பிறகு தோனியின் களவியூகத்துடன் விளையாடினார் ரோஹித் சர்மா, பிராவோவை ஒரு புல்ஷாட் பவுண்டரி, வாட்சனை தூக்கி அடித்த ஒரு பவுண்டரி என்று ரோஹித் தன்னை வெளிப்படுத்தினார். ஹர்திக் பாண்டியா வாட்சனின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சி லாங் ஆனில் அனாயசமாக ஒரு சிக்ஸ் அடித்தார்.
கடைசி 2 ஓவர்களீல் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்கூரை 4 பவுண்டரிகள் விளாசினார். அன்று பந்தை சாத்துக்குடியாகப் பிழிந்து டிவில்லியர்ஸுக்குக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார், நேற்று ஃபுல் லெந்த்தில் வீசி ரோஹித்திடம் சிக்கினார். அதுவும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை ஸ்வீப் அடித்து பவுண்டரிக்கு அனுப்பியது தாக்கூர் ரக பவுலிங்கிற்கு ஒரு பாடம். இந்த ஷாட் ரோஹித் சர்மாவின் அரைசதமானது. 20வது ஓவரில் வெற்றி வந்தது. சாஹர் காயமடைந்ததும் ஒரு பின்னடைவுதான். ரோஹித் சர்மா ஆட்ட நாயகன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 19 hours ago |
மினி பான் கேக்6 days 15 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
06 May 2024சென்னை : தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.