எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்: சாதாரண தொண்டனாக பொதுவாழ்வை தொடங்கி நாட்டுப்பணியையே உயிர்மூச்சாக கொண்டவர் கர்மவீரர் காமராஜர் என்று விருதுநகரில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.
விருதுநகரில் காமராஜர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
115 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் குமாரசாமி - சிவகாமி அம்மையார் தம்பதிக்கு மகனாக பிறந்த ஒரு சிறுவன், தன்னுடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு பள்ளிக்கு செல்ல முடியாமல், தாய்மாமன் கருப்பையா நாடாரின் துணிக் கடைக்குப் போக வேண்டிய சூழ்நிலையிலும், தவறாது ஞானம்பிள்ளையின் பொடிக் கடைக்கு பத்திரிகைகளை படிப்பதற்காகவே போவான். அங்கு வரும் பத்திரிகைகளை ஆர்வத்துடன் படிப்பான், அரசியல் பற்றி மற்றவர்களுடன் விவாதிப்பான். இந்த சிறுவனுக்கு அரசியல் அக்கறை வேண்டாமென்று அவரது பாட்டி கூறுவார். அதற்கு அந்த மாணவன், நான் ஒன்று சொல்லுகிறேன் பாட்டி. நம்ம எண்ணெய் கடை பெரியசாமி அண்ணாச்சி வீட்டில் இருக்கிற நாய் மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால் அந்த நாய் நம் வீட்டிற்குள் நுழைந்தால் முதலில் விரட்டுபவர்களே நீங்கள்தான் பாட்டி, அதே மாதிரிதான் வெள்ளைக்காரன். நம்ம நாட்டிலே அவனுக்கு என்ன வேலை? அதிகாரம் செய்கிறான். அதைக் கண்டிக்காமல் எப்படி விடுவது பாட்டி? என்றான் அந்த சிறுவன். அச்சிறுவன் தான் பிற்காலத்தில் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த பெருந்தலைவர் காமராசர்.
மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த சுதந்திரப் போராட்டம் பற்றி பத்திரிகையின் மூலமும், விருதுநகரில் உள்ள பம்பாய் அண்ணாச்சி என்றழைக்கப்பட்ட கோவிந்த நாடாரின் மூலமும் தெரிந்து கொண்டார். இதனால் நாட்டின் மீதும், தேசியத் தலைவர்கள் மீதும், பற்றும் பக்தியும் ஏற்பட்டது. இதன் மூலம் மகாத்மா காந்திஜியின் மானசீக தொண்டனாகவே மாறினார். இதன் விளைவாக தனது 16-வது வயதில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபின், தீரர் சத்தியமூர்த்தி அவர்களை தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார். 1930-ம் ஆண்டு நடைபெற்ற உப்புசத்தியாகிரக போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றார். பின்னர் வெள்ளையனே வெளியேறு போராட்டம் போன்ற பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றார். அவர் தனது இளமைக் காலத்தில் 9 ஆண்டுகளை சிறையிலேயே கழித்து, தனது வாழ்வை நாட்டுக்காகவே அர்ப்பணித்தார்.
இவர் 1936-ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் ஆனார். பின்னர் 1940-ம் ஆண்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954-ம் ஆண்டு வரை அந்த பொறுப்பினை வகித்தார். 1940-ம் ஆண்டு விருதுநகர் நகராட்சிக்கு நடந்த தேர்தலில், காமராசர் சிறையில் இருந்து கொண்டே வெற்றி பெற்றார். பின்னர் 1941-ம் ஆண்டு அந்த நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த பின் நகராட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னும் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபடுவதில் அவருடைய நாட்டம் இருந்ததால், அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். இவர் முதன்முதலில் 1937-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் 1946-ம் ஆண்டில் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பின்னர் 1952-ம் ஆண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் நாள் தமிழ்புத்தாண்டில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். 1954-ம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற சமயம் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவரது நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதியில் உள்ள யாரையும் பதவி விலகச் சொல்லாமல், அப்போது காலியாக இருந்த குடியாத்தம் சட்டமன்ற தொகுதியிலிருந்து போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1957 மற்றும் 1962-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தல்களில், சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காமராசர் அவர்கள் 1954 முதல் 1963 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக 9 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், அக்டோபர் 1963 முதல் 1967-ம் ஆண்டு வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்தார். 1969 மற்றும் 1971 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சாதாரணத் தொண்டனாக பொது வாழ்வைத் தொடங்கி, நாட்டுப்பணியையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து, பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசியலில் ஒரு தனிப்பெரும் சக்தியாக திகழ்ந்தவர் கர்மவீரர் காமராஜர். கல்வித்துறையில் ஒரு நூற்றாண்டில் ஏற்பட வேண்டிய வளர்ச்சியை முதலமைச்சர் காமராசர் ஒன்பது ஆண்டுகளில் சாதித்துக் காட்டினார். தனது ஆட்சிக் காலத்தில் பள்ளிகளின் எண்ணிக்கையை பன்மடங்காக உயர்த்தி, தமிழ்நாட்டில் கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் அவர். கிராமப்புற மாணவ, மாணவிகள் கல்வியறிவு பெற, வறுமை பெரிய தடையாக இருப்பதைத் தமது அனுபவம் மூலம் பெருந்தலைவர் காமராஜர் உணர்ந்தார். மாணவர்களுக்குப் பள்ளியிலேயே, ஒருவேளை உணவு அளித்தால், அதிகமான பிள்ளைகள் கல்வி கற்க முன்வருவார்கள். அதன்மூலம், படிப்பறிவு பெறுவோரின் எண்ணிக்கையை உயர்த்தலாம். அது சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற எண்ணத்தில்,உதித்ததுதான் மதிய உணவுத் திட்டம். எல்லா ஏழைப் பிள்ளைகளும் இலவச கல்வியை பெற வேண்டும். அவர்கள் முன்னேற வேண்டும் என்பதில் பெருந்தலைவர் அக்கறை காட்டினார். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்