எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காத பேட்டரி வாகனங்களை மேம்படுத்துவதற்கும், சந்தைப்படுத்துவற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பான சர்வதேச மாநாடு டெல்லியில் தொடங்கியது. உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களின் தலைமை பிரதிநிதிகளும், முதலீட்டாளர்களும் அதில் கலந்துகொண்டனர்.
அவர்களைத் தவிர மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மாநாட்டைத் தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
வாகனப் போக்குவரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காகவும், அதன் வாயிலாக நாட்டை மேம்படுத்தும்வதற்காகவும் பல்வேறு செயல் திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அவற்றில் குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக இரு மடங்காக்கப்பட்டுள்ளன; ஊரகப் பகுதிகளில் சாலை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன; அதுமட்டுமன்றி, புறச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வாகனங்களை அரசு ஊக்குவித்து வருகிறது. விமானப் போக்குவரத்து சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன; அதற்கான கட்டணங்களும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய சூழலில் இந்தியா புதிய உச்சத்தை நோக்கி முன்னேறி வருகிறது. உலக அளவில் அதிவேகமாக பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடாக நமது தேசம் விளங்குகிறது. நாட்டின் 100 நகரங்கள் பொலிவுறு நகரங்களாக உருவாக்கப்பட்டு வருகின்றன. சாலை வசதிகளை மேம்படுத்தி வருவது மட்டுமன்றி விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து தலங்களையும் விரிவுபடுத்தி வருகிறோம்.
அனைத்துக்கும் உச்சமாக நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்கு வகை செய்யும் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் நிலவும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. சாமானிய மக்களுக்கு உறைவிடமும், கழிப்பறை வசதிகளும், சமையல் எரிவாயு இணைப்பும், வங்கிச் சேவைகளும் கிடைத்துள்ளன. நம் நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருப்பதற்கு இத்தகைய திட்டங்களே சாலச் சிறந்த சான்று.
போக்குவரத்தைப் பொருத்தவரை, அதை மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. சிக்கல் இல்லாத பயணத்தை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு சிறப்பான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அதன் பயனால் நாட்டின் பொருளாதாரமே வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.
அதிலும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வாகனங்களை மேம்படுத்த வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்திதான் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான வலுவான ஆயுதமாக இருக்கக்கூடும்.
சாதாரண பேட்டரியில் இருந்து அதிநவீன பேட்டரி வரை அனைத்து விதமான தயாரிப்புகளிலும் முதலீடுகளைஅதிகரிப்பது அவசியம். நாட்டில் பேட்டரி வாகனங்களின் விகிதத்தை அடுத்த 5 ஆண்டுகளில் 15 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப வரும் காலங்களில் அத்தகைய வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். கார் மட்டுமன்றி இரு சக்கர வாகனங்கள், ரிக்ஷாக்கள் வரை பேட்டரியில் இயங்கும் தொழில்நுட்பம் சென்றடைவது அவசியம் என்றார் பிரதமர் மோடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.