எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துபாய்,ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஷிகர் தவான், ரோகித் சர்மா சதம் அடித்தனர். இந்த வெற்றி மூலம் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்தது.
மீண்டும் மோதல்....14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றில் துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் சோகைல், உஸ்மான் கான் ஆகியோருக்கு பதிலாக முகமது அமிர், ஷதப்கான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
பாக். பேட்டிங் தேர்வு.....‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் ஆகியோர் களம் இறங்கினார்கள். புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தங்களது வேகப்பந்து வீச்சு தாக்குதலை நேர்த்தியாக தொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடித்து ஆட சிரமப்பட்டனர்.
ரோகித் சர்மா அப்பீல்........8-வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச அழைக்கப்பட்டார். அதற்கு உடனடியாக நல்ல பலன் கிடைத்தது. அவரது அந்த ஓவரின் கடைசி பந்தில் இமாம் உல்-ஹக் (10 ரன், 20 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால் நடுவர் எல்.பி.டபிள்யூ. கொடுக்க மறுத்ததால் நடுவரின் முடிவை எதிர்த்து கேப்டன் ரோகித் சர்மா அப்பீல் செய்தார். இதில் இந்திய அணியின் அப்பீல் வெற்றியில் முடிந்தது. இமாம் உல்-ஹக் அவுட் என்று அறிவிக்கப்பட்டு வெளியேறினார்.
குல்தீப் யாதவ்............அடுத்து பாபர் அசாம் களம் இறங்கினார். 13-வது ஓவரில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் பஹார் ஜமான் முதல் சிக்சரை பறக்கவிட்டு அசத்தினார். ஆனால் குல்தீப் யாதவின் அடுத்த ஓவரில் பஹார் ஜமான் (31 ரன்கள், 44 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்) முன்னால் இறங்கி தரையில் முட்டி போட்ட நிலையில் பந்தை அடிக்க முற்பட்டு நிலை தடுமாறி விழுந்ததுடன் எ.பி.டபிள்யூ. முறையில் விக்கெட்டையும் இழந்து நடையை கட்டினார்.
பாக். தடுமாற்றம்.....இதைத்தொடர்ந்து கேப்டன் சர்ப்ராஸ் அகமது, பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்தார். ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஒரு ரன் எடுப்பதற்கு ஓட முயற்சித்த சர்ப்ராஸ் அகமது, திடீரென எதிர்முனையில் இருந்த பாபர் அசாமை திரும்பி விடும்படி சைகை செய்தார். ஆனால் அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி கொண்ட யுஸ்வேந்திர சாஹல் துரிதமாக செயல்பட்டு பாபர் அசாமை (9 ரன்) ரன்-அவுட் செய்தார். அப்போது பாகிஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்து தடுமாறியது.
சோயிப் மாலிக்...இதனை அடுத்து சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமதுவுடன் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பாகிஸ்தான் அணி 27.1 ஓவர்களில் 100 ரன்னை எட்டியது. அடித்து ஆடிய சோயிப் மாலிக் 64 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதத்தை கடந்தார். இந்த போட்டி தொடரில் சோயிப் மாலிக் அடித்த 2-வது அரைசதம் இதுவாகும். அணியின் ஸ்கோர் 38.5 ஓவர்களில் 165 ரன்னாக உயர்ந்த போது சர்ப்ராஸ் அகமது (44 ரன்கள், 66 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு சர்ப்ராஸ் அகமது-சோயிப் மாலிக் ஜோடி 107 ரன்கள் திரட்டியது.
237 ரன்கள்...அடுத்து ஆசிப் அலி, சோயிப் மாலிக்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினார்கள். 42-வது ஓவரில் புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் ஆசிப் அலி 2 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். சோயிப் மாலிக் ஒரு பவுண்டரி விரட்டினார். அந்த ஓவரில் மட்டும் 22 ரன்களை புவனேஷ்வர்குமார் விட்டுக்கொடுத்தார். 43.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 200 ரன்களை கடந்தது. நிலைத்து நின்று ஆடிய சோயிப் மாலிக் 90 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதிரடியாக ஆடிய ஆசிப் அலி (30 ரன்கள், 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன்) யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சிலும், ஷதப் கான் (10 ரன்) ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சிலும் அடுத்தடுத்து கிளன் போல்டு ஆகி ஆட்டம் இழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. முகமது நவாஸ் 15 ரன்னுடனும், ஹசன் அலி 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
238 ரன்கள் இலக்கு...பின்னர் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 15-வது சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 100 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 114 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார். இந்த போட்டி தொடரில் அவர் அடித்த 2-வது சதம் இதுவாகும். கேப்டன் ரோகித் சர்மா 111 ரன்னுடனும் (119 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன்), அம்பத்தி ராயுடு 12 ரன்னுடனும் (18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) களத்தில் இருந்தனர். 19-வது சதத்தை பூர்த்தி செய்த ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களையும் கடந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் 2 இந்திய வீரர்கள் சதம் அடிப்பது இது 3-வது நிகழ்வாகும். ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இறுதிப்போட்டிக்கு...சூப்பர்-4 சுற்றில் தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்த இந்திய அணி ஏறக்குறைய இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அத்துடன் பாகிஸ்தான் அணியை மீண்டும் வீழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று இருந்தது. போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இந்திய அணி தனது கடைசி ‘சூப்பர்-4’ சுற்று ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.