முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை அவமதிப்புக்கு ஹெச்.ராஜாவே காரணம்: வைகோ

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை அவமதிப்புக்கு ஹெச்.ராஜாவே காரணம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழ் ஈழம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து மறைந்த திலீபனின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கபட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் மதிமுக தலைமையகத்தில் திலீபனின் உருவப்படத்திற்கு அதன் பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

நாட்டில் சிந்தனையாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. மதச்சார்பின்மையை சிதைத்து, நல்லிணக்கத்தை குலைக்க சதி நடக்கிறது. இந்துத்வா சக்திகளின் பின்னணியில் மத்திய ஆளும் அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை அவமதிப்புக்கு ஹெச்.ராஜாவே காரணம். இவ்வாறு அவர் கூறினார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து