முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீடூ விவகாரம்: நடிகர் அர்ஜூன் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு

சனிக்கிழமை, 27 அக்டோபர் 2018      சினிமா
Image Unavailable

பெங்களூரு,நடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை சுருதி ஹரிகரன் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை சுருதி ஹரிகரன் ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். 'விஸ்மயா' படப்பிடிப்பு ஒத்திகையில் அர்ஜூன் தன்னை இறுக்கி அணைத்து கைவிரல்களை உடலில் படர விட்டதாக குற்றம் சாட்டினார். ஆனால் அர்ஜூன் இதனை மறுத்தார். சுருதி ஹரிகரன் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று கூறினார். அர்ஜூன் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவும் பணம் பறிக்கும் முயற்சியில் சுருதி ஹரிகரன் பாலியல் புகார் சொல்கிறார் என்று கண்டித்தார். கன்னட திரைப்பட வர்த்தக சபை அர்ஜூனையும், சுருதி ஹரிகரனையும் சந்திக்க வைத்து சமரச முயற்சியில் ஈடுபடப்போவதாக அறிவித்தது.

இந்த நிலையில் சுருதி ஹரிகரன், என்மீது அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திப்பேன். ஆனால் அவருக்கு முன்னால் நான் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டேன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 'விஸ்மயா' படத்தில் நடித்த போது தனக்கு நடிகர் அர்ஜூன் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகர் அர்ஜூன் மீது 354 ஏ, 509, 506, 354 ஆகிய நான்கு பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து