எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி.- அழகப்பா பல்கலைக்கழக இணையக் கல்வி மையத்தின் சார்பில் “தேசிய கல்வி ஆவண வைப்பு” என்ற தலைப்பில் நேற்று பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இணைப்பு கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக கருத்தரங்க அறையில் நடைப்பெற்றது.
பல்கலைக்கழக தேர்வாணையர் முனைவர்.கே.உதயசூரியன் வரவேற்புரை ஆற்றினாh அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.இராஜேந்திரன் இப்பயிற்சி பட்டறையை துவக்கி வைத்தார். அவர் தமது உரையில், இதுபோன்ற பயிற்சி பட்டறை அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஒரு நீண்ட கால தேவையாக உள்ளது என்றார். அழகப்பா பல்கலைக்கழகம் தேசிய மற்றும் உலக அரங்கில் பல்வேறு அங்கீகாரங்களை பெற்று வரும் வேளையில் தேர்வு மற்றும் பல்கலைக்கழகம் வழங்குகின்ற சான்றிதழ்களிலும் நவீன காலத்திற்கேற்றார்ப்போல் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவது அவசியம் என்றார். இதனடிப்படையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய கல்வி ஆவண காப்பகத்தின் துணையோடு அழகப்பா பல்கலைக்கழகம் வழங்குகின்ற மதிப்பெண், பட்டயம் மற்றும் பட்டச் சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது என்றார். மேலும் அவர் இந்த இயங்குதளத்தில் மாணவர்களின் பதிவு முடிந்து தற்பொழுது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் நிலைக்கு முன்னேறி உள்ளோம். இப்பதிவேற்றம் முழுதாக முடிந்து தேசிய ஆவண காப்பகத்தில் ஒப்புதல் பெறப்பட்டபின், ஒரு மாணவர் இயற்கை பேரிடர் மற்றும் ஏதேனும் ஒரு அசம்பாவிதத்தில் தனது சான்றிதழ்களை இழக்கும்பட்சத்தில் தன்னுடைய நகல் சான்றிதழ்களை பெறுவதில் உள்ள நடைமுறைகள் மற்றும் தன்னுடைய சான்றிதழ்களின் உண்மைத்தன்மை நிருபணம் செய்வதில் உள்ள நீண்ட நடைமுறைகளும் வெகுவாக குறைந்துவிடும் என்றார். இதன் மூலம் மாணவர்கள் தங்களது நகல் சான்றிதழ்களை எளிதில் பெற முடியும் என்றார். அதோடு போலி மதிப்பெண் மற்றும் பட்டச் சான்றிதழ்களை எளிதாக இனங்கண்டறியவும் முடியும்” என்றார்.
இப்பயிற்சி பட்டறையை தேசிய ஆவண பாதுகாப்பு வைப்பு நிறுவனத்தின் உதவி மேலாளர் திரு.பிரசாந்த் அவர்கள் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார். அவர் தனது உரையில், “மாணவர்கள், அவர்கள் பயிலும் நிறுவனம் மற்றும் தேசிய ஆவண காப்பகம் ஆகியவற்றின் கூட்டுமுயற்சியால்தான் சான்றிதழ்களை ஆவணப்படுத்துவது சாத்தியமாகும் என்றார். மேலும் அவர் கூறுகையில் அழகப்பா பல்கலைக்கழகமானது மற்ற கல்வி நிறுவனங்களைக் காட்டிலும் சான்றிதழ்களை ஆவணப்படுத்துதலில் அதிக முனைப்போடு செயல்படுவதாக குறிப்பிட்டார். இந்த இயங்குதளத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி அடையாள எண்ணுடன் நிர்வகிக்கப்படுவதால் சான்றிதழ்களின் நம்பகத்தன்மை பற்றிய பயம் ஏதும் தேவையில்லை என்றார்.
இணையவழி கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.பாஸ்கரன் நன்றியுரை ஆற்றினார். துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஆர்.இராம்நாத் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.