எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, தன் குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திக்க கூடிய கட்சிதான் தி.மு.க. என்றும், எந்தக் காலத்திலும் ஸ்டாலினால் முதல்வர் பதவிக்கு வர முடியாது என்றும் மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை தனி வட்டமாக அறிவித்ததற்கு நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பெரிய வட்டங்களை தனியாகப் பிரித்து சிறிய வட்டங்களாகப் பிரிக்கும் போதுதான் கடைக்கோடிப் பகுதியில் உள்ள மக்கள் எளிதாக வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று தங்களுக்குத் தேவையான மற்றும் உதவிகளைப் பெற முடியும். அந்த வகையில்தான் கள்ளிப்பட்டி வட்டம் தனி வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவின் அரசுதான் அதிக எண்ணிக்கையில் புதிய வட்டங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இன்றைக்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த அரசை குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் காலத்தில் எதையும் செய்ததாக தெரியவில்லை. எந்தச் சாதனையும் பெரிதாக செய்ததாக தெரியவில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். மாநிலத்திலும் ஆட்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் குடும்பம் மட்டும் வளம் பெற்றது. தி.மு.க. கட்சி என்றால் அந்த கட்சிதான் குடும்ப கட்சி. ஆனால் அ.தி.மு.க. ஒட்டுமொத்த மக்களுக்கும் சொந்த கட்சி. இந்தக் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது. இந்தக் கட்சியில் சாதாரண நிலையில் இருப்பவர்களும் உயர்ந்த நிலைக்கு வர முடியும். சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, ஏன் முதல்வராக கூட அ.தி.மு.க.வில்தான் வர முடியும். வேறு எந்தக் கட்சியிலும் வர முடியாது. தி.மு.க.வில் கருணாநிதி முதல்வராக இருந்தார். அதற்குப் பிறகு ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு துடிக்கிறார். எந்தக் காலத்திலும் அவர் முதல்வராக வர முடியாது. அது வேறு விஷயம். அதற்குப் பிறகு வாரிசு. அவரின் மகன் உதயநிதியை கட்சிக்கு கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டி முயன்று பார்க்கிறார். இதுதான் வாரிசு அரசியல். மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். தன் மக்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய கட்சிதான் தி.மு.க.
சிந்திக்கக் கூடிய கட்சி. என்னைப் பொறுத்தவரை கிராமத்தில் பிறந்து வாழ்ந்து வருபவன். மேடையில் இருப்பவர்கள் பெரும்பாலும் கிராமத்தில் பிறந்து வாழ்ந்து வருகிறவர்கள். கிராமத்தில் இருக்கின்ற விவசாயிகளுக்கு என்ன பிரச்சனை என்று தெரியும். அதில் வேலை செய்கின்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதும் தெரியும். மக்களோடு மக்களாக நின்று பழகி படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு உங்களின் பேராதவரோடு தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறேன். ஆகவே விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கின்ற அரசு இந்த அரசு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல விவசாய தொழிலாளி வளர வேண்டும். வாழ வேண்டும். சிரித்து வாழ வேண்டும். மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களை அம்மாவின் அரசு வழங்கும். அம்மா வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர். சாதாரண குடிசையில் வாழும் ஏழைகள் கூட கிரைண்டர், மிக்ஸியை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மிக்ஸி, கிரைண்டர் வழங்கியவர் அம்மா. அவர் எடுத்த நடவடிக்கையால் இன்றைக்கு மக்கள் செழிப்போடு இருக்கின்ற காட்சியை பார்க்கின்றோம். எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே திட்டமிட்டு இன்றைக்குப் பொய்யான செய்தியைப் பரப்பி வருகிறார்கள். பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளீர்கள். பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஆயிரம் ரூபாயை வழங்கினோம். இதைக் கூட எதிர்க்கட்சிகள் குறை கூறினார்கள். தி.மு.க. இதனைத் தடுத்து நிறுத்த வழக்கு போட்டது. ஏழைகளுக்கு கொடுப்பதைக்கூட தடுத்து நிறுத்துகிற கட்சிதான் தி.மு.க. எம்.ஜி.ஆர். அம்மா ஆகிய இருவரும் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள். மக்கள்தான் அவர்களுக்குக் குடும்பம். மக்களின் பிரச்சனையை தன் பிரச்சனையாக கருதிச் செயல்பட்டவர்கள். அந்த வழியில் வந்த அம்மாவின் அரசையும் மக்கள்தான் வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த அரசுக்குத் துணை நிற்பவர்கள் மக்கள். அது போல இந்த இயக்கத்திற்குத் தலைவர் என்பவர் இல்லை. தொண்டர்களால் இயக்கப்படுகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும்தான். நாடாளுமன்ற தேர்தல் விரைவாக வரவுள்ளது. என்னவெல்லாமோ பொய்களை சொல்வார்கள். இன்றைக்கு கிராமம் கிராமாக சென்று பார்க்கிறார்கள். இத்தனை நாட்களாக கிராமத்தில் உள்ள மக்களை ஸ்டாலின் கண்களுக்கு தெரியவில்லை. கிராம மக்களுக்கு கொடுப்பதையே தடுத்து நிறுத்துபவர்கள், இவர்கள் எப்படி நல்லது செய்யப் போகிறார்கள். இதனை எல்லாம் நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நம்முடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக புதிய திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வர வேண்டியதற்காக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து மாபெரும் வெற்றியைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்றைக்குத் தமிழகம் அனைத்து வகையிலும் முதன்மை மாநிலமாக விளங்குவதற்கு அரசு தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.
இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாத்தூர் வழியாக நெல்லை சென்றார். சாத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 9 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்
16 May 2024சென்னை, சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவ
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.
-
பெண் எம்.பி மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
16 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார
-
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி முயற்சி: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
16 May 2024லக்னோ, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் முயற்சித்தன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&nbs
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
16 May 2024சென்னை, தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அபராதம் விதித்துள்ளது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
நிலவில் கால்பதிக்கும் இந்தியா: கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள்: வைரலாகும் பாக். எம்.பி.யின் பேச்சு
16 May 2024இஸ்லாமாபாத், இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது என அந்நாட்டு எம்.பி.
-
கொடைக்கானலில் இன்று முதல் 61-வது மலர் கண்காட்சி துவக்கம்: ஒரு கோடி மலர்களால் பூத்துக்குலுங்கும் பிரையண்ட் பூங்கா
16 May 2024கொடைக்கானல், கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகின்றது. பிரையண்ட் பூங்காவில் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
-
பெங்களூரு மருத்துவமனையில் திருமாவளவனுக்கு கால்வீக்க சிகிச்சை
16 May 2024சென்னை, மக்களவைத் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக வி.சி.க.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
16 May 2024சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்
-
10, 12-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி: தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு
16 May 2024சென்னை, தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழில் சென்டம் எடுத்த மாணவர்களுக்கு மாநில
-
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
16 May 2024சென்னை, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நரம்பியல்துறைக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ. 65 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு: வரும் 19-ம் தேதி தொடங்க திட்டம்
16 May 2024நாகை, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சுலோவேக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது 71 வயதான எழுத்தாளர் என தகவல்
16 May 2024மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று முன்தினம் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்தார்.
-
புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடற்கரையில் இருந்து மக்களை வெளியேற்றிய போலீசார்
16 May 2024புதுச்சேரி, புதுச்சேரியில் நேற்று காலை முதலே அவ்வப்போது சாரல் மழை பொழிகிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை
16 May 2024ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
16 May 2024சென்னை, செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
16 May 2024புது டெல்லி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மாணவர் தற்கொலை
16 May 2024சென்னை, ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கொச்சி துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய வாலிபர் கைது
16 May 2024திருவனந்தபுரம், கொச்சி துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய வாலிபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர 1.50 லட்சம் பேர் விண்ணப்பம்
16 May 2024சென்னை, பொறியியல் கல்லூரிகளில் சேர கடந்த 10 நாட்களில் 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.