முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வந்தது

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் 35 நாட்கள் நீடித்த அரசு துறைகள் முடக்கம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

அண்டை நாடான மெக்சிகோ வழியாக அமெரிக்காவினுள் நுழைகிறவர்களை தடுக்கிற விதத்தில் எல்லையில் பிரம்மாண்ட தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்பது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கனவுத்திட்டம். அதுமட்டுமின்றி இது அவரது தேர்தல் வாக்குறுதியும் ஆகும். இந்த தடுப்புச்சுவர் கட்ட மெக்சிகோ பணம் தர மறுத்து விட்ட நிலையில், உள்நாட்டு நிதி 5.7 பில்லியன் டாலர் வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தை ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் ஜனநாயக கட்சி, டிரம்பின் இந்த திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மக்களின் வரிப்பணத்தை, தடுப்புச்சுவர் கட்ட வழங்க முடியாது என்று அந்த கட்சி கூறுகிறது. இதன் காரணமாக செலவின மசோதாவை நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றிய டிரம்ப் அரசால், செனட் சபையில் நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால், அவை கடந்த மாதம் 22-ம் தேதி முதல் முடங்கின.

அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் அரசுத்துறைகள் முடங்கியது, இதுவே முதல்முறை என சொல்லப்படுகிறது. அரசுத் துறைகளின் முடக்கம் காரணமாக அமெரிக்க பொருளாதாரத்துக்கு சுமார் 6 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் 35 நாட்களாக நீடித்து வந்த அரசு துறைகள் முடக்கத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இந்த முடக்கத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வர ஏதுவாக ஒரு ஒப்பந்தத்துக்கு டிரம்ப் உடன்பட்டார். இதன்படி அரசுத் துறைகள் 21 நாட்கள் செயல்படுவதற்கு ஏற்ற வகையில் தற்காலிக செலவின மசோதா, நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு டிரம்ப் உடனடியாக ஒப்புதல் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து