எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேப்பியர் : ‘என்னாது நியூசிலாந்து தொடரை இந்தியா வென்று விட்டதா?.. போட்டி ஆரம்பிச்சது தெரியல அதுக்குல்ல ஜெயிச்சுட்டாங்கலா’ இப்படிதான் ஒருவர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். ஆம், 5 போட்டிகள் கொண்ட தொடரில், 2 போட்டிகள் மிச்சமிருக்கையில், முதல் 3 போட்டியில் வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டது. இந்த தொடரை கைப்பற்றியதன் மூலம், இந்திய அணியில் சாதனைப் பட்டியலில் பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றுள்ளன
10 வருட சவால்
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி 2009ம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணி 10 வருடங்கள் கழித்து தற்போது அந்த மண்ணில் ஒருநாள் தொடரை வென்றிருக்கிறது. #10YearChallenge என்ற ஹேஷ்டேக்கில் சிலர் இந்த கருத்தினை பதிவிட்டு வருகிறார்கள்.
சாதனைகள்
1) தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடர்களை வென்ற ஒரே ஆசிய கேப்டன் கோலி.
2) நியூசிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் வென்ற அணி இந்தியா.
3) அந்நிய மண்ணில் விராட் கோலி தலைமையிலான அணி 7 தொடர்களில் விளையாடி 6ல் வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 13 தொடர்களில் விளையாடி 12ல் வெற்றி பெற்றுள்ளது.
4) விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 63 போட்டிகளில் விளையாடி 47ல் வென்றுள்ளது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 50 போட்டிகளில் வென்று முதலிடத்தில் உள்ளார்.
5) ஆசிய கேப்டன்களைப் பொறுத்தவரை விராட் கோலிதான் அதிக வெற்றிக்கான சராசரி வைத்துள்ளார். கோலிக்கு (72.72%) அடுத்தபடியாக பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் (58.09%), ஜெயவர்த்தனே (57.14), கங்குலி (57.35) உள்ளனர்.
சிக்ஸர் மைல்கல்
இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டோனியுடன் ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். டோனி, ரோகித் இருவரும் தலா 215 சிக்ஸர்கள் விளாசியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சச்சின் (195), கங்குலி (189), யுவராஜ் (153) ஆகியோர் உள்ளனர்.
டோனி இல்லாத போட்டி
டோனி ஒருநாள் போட்டிக்கான அணியில் அரிதாகவே இடம்பெறாமல் இருப்பார். நியூசி.க்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியோடு சேர்த்து மொத்தம் 5 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. 2007ம் ஆண்டு அயர்லாந்து மற்றும் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை. 2013ம் ஆண்டு தசைப்பிடிப்பு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.
நியூசிலாந்தில் அதிக ஒருநாள் போட்டிகளில் வென்ற கேப்டன்:
அசாருதீன் - 5, டோனி - 3, கோலி - 3, கங்குலி - 2
குறிப்பிட்ட சில பேட்ஸ்மேன்களின் சிறந்த ஆட்டங்களால்தான் பெரும்பாலான தொடர்களை இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். பேட்ஸ்மேன், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சிறப்பான ஆட்டத்திறனால் தொடரை வெல்வது அரிது. அந்த வகையில் இந்த தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
வேகப்பந்து வீச்சாளராக ஷமி இந்தத் தொடரில் ஜொலித்தார். சாஹல், குல்தீப் ஜோடி சுழற்பந்து வீச்சில் பட்டையை கிளப்பியது. பகுதிநேர பந்துவீச்சாளராக கேதர் ஜாதவும் சிறப்பாக செயல்பட்டார். பேட்டிங்கை பொறுத்தவரை வழக்கமாக ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆகிய முன்வரிசை வீரர்கள் தான் செயல்பட்டு வந்தார்கள். ஆனால், இந்தத் தொடரில் முன்வரிசை வீரர்களையும் தாண்டி டோனி, ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்கள் மத்தியில் சிறப்பாக விளையாடினர். பீல்டிங்கிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.
3-வது ஒருநாள் போட்டியில் சாஹல் பந்துவீச்சில் பாண்ட்யாவிடம் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கேட்சாகி ஆட்டமிழந்தார். இந்த கேட்சினை பாண்ட்யா காற்றில் பறந்தபடி டைவ் அடித்து பிடித்தார். பாண்ட்யா பாய்ந்து பந்தினை பிடித்த படங்கள் ட்விட்டரில் வைரலாக பகிரப்பட்டது.
இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வந்தது. அதனால், பல போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது. டோனி கடந்த ஆண்டில் பார்மில் இல்லாததும் பிரச்னையாக இருந்து வந்தது. அதனால், 4, 5, 6வது இடங்களுக்கு பல பேட்ஸ்மேன்களை கோலி மாற்றிப் பார்த்தார்.
பார்முக்கு திரும்பிய...
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முதல் டோனி மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அந்த வரிசையில் அம்பத்தி ராயுடுவும், தினேஷ் கார்த்திக்கும் அட்டகாசமாக போட்டியை முடித்து வைத்தனர். எந்தவொரு பதட்டமும் இல்லாமல் 7 ஓவர்களுக்கு முன்பாகவே ஆட்டத்தை வெற்றிபெற செய்துள்ளனர். இது, இந்திய அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
ஆஸ்திரேலியா தொடரில் டோனி தொடர்ந்து மூன்று அரைசதம் விளாசிய போது, அவர் மீண்டும் பார்முக்கு திரும்பிவிட்டார் என்று அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக டோனி மீது கடுமையாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. டோனி ஓய்வு பெற வேண்டும், உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர். அதனால், டோனி மீண்டும் பார்முக்கு வந்தது இந்திய அணிக்கு நம்பிக்கையை கொடுத்தது.
இடத்தை பிடிக்க..
இது ஒருபுறம் இருந்தாலும், உலகக் கோப்பைக்கான அணியில் தன்னுடைய இருப்பை தக்கவைத்து கொள்ளவே ஆடுகிறார் என்ற கருத்து எழுந்தது. அதேபோல், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது என்றே பலரும் கூறியுள்ளனர். ராயுடு, தினேஷ் கார்த்திக் என பலரும் தங்களுடைய இடத்தை அசத்தலாக உறுதி செய்துள்ளனர். ஒருவருக்கொரு சொதப்பாமல் போட்டி போட்டு விளையாடினர். இதனால் மிடில் ஆர்டரில் யாராவது செட் ஆவார்களா? என்ற நிலை சென்று, தற்போது யாரை எடுப்பது என்ற குழப்பமே உருவாகும் நிலை வந்துவிட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.