எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வரும் பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வும், பா.ஜ.க.வும் இணைந்துள்ளன. இக்கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பாரதிய ஜனதாவுக்கு 5 நாடாளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த கூட்டணி வெற்றி கூட்டணி என்று பா.ம.க.நிறுவனர் ராமதாசும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
துணை முதல்வர் தகவல்
நடப்பு பாராளுமன்றத்தின் பதவிகாலம் முடியவிருப்பதால் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது. வெகு விரைவில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடிக்க தொடங்கியது. எந்த கட்சி யாருடன் சேர்ந்து கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட தொடங்கியது. இந்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை தேசிய,மாநில கட்சிகளுடன் நடந்து வருவதாகவும் ஒரிரு நாளில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்தார். இந்நிலையில் நேற்று பேச்சுவார்த்தைக்குப்பிறகு அ.தி.மு.க.வுடன் பா.ம.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகள் கூட்டணியில் இணைந்தன. இது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி ஒப்பந்தம்
முன்னதாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுண் பிளாசா ஓட்டலுக்கு நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்தனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோரும் வந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து அவர்களை வரவேற்றார். பின்னர், அவர்களுடன் அ.தி.மு.க. முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொகுதிகள் பின்னர்...
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிக் கூட்டணி. பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தப்படி, பா.ம.க. 7 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும். மேலும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு பா.ம.க. ஆதரவு அளிக்கும். பா.ம.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை
இதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுநடத்துவதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று சென்னை வந்தார். ஆனால் சென்னை வருவதாக இருந்த பா.ஜ.க.தேசிய தலைவர் அமித்ஷா நேற்று வரவில்லை. அவருக்கு பதில் தமிழக பா.ஜ.க.தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் வந்தார். அவருடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன் முடிவில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வுக்கு 5 இடங்களை ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க - பா.ஜ.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
கூட்டாக பேட்டி...
பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கி வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது அ.தி.மு.க. இதையடுத்து இரு கட்சி தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர். இதில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது,
அ.தி.மு,க - பா.ஜ.க. மெகா கூட்டணி அமைத்து தமிழகம்- புதுச்சேரியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பாரதீய ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் என கூறினார்.
நாற்பதும் நமதே...
இதையடுத்து தமிழக பா.ஜ.க.பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம், புதுச்சேரியில் நாற்பதும் நமதே என்ற முழக்கத்தோடு தேர்தலை சந்திப்போம். அ.தி.மு.க. தலைமையில் கூட்டணியாக நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம். இந்த கூட்டணி குறித்து ஜெயலலிதா மகிழ்ச்சி அடைவார். அவரது கனவை நிறைவேற்ற உழைப்போம் என்று தெரிவித்தார். அ.தி.மு.க.வுடன் பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்திருப்பது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எப்போது தேர்தல் அறிவிப்பு வந்தாலும் கூட்டணி குறித்த அறிவிப்பை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் முதலில் வெளியிடுவார். அதேபோல், அம்மா வழியில் நடக்கும் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க அரசும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அறிவிப்பை முதலில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 19 hours ago |
மினி பான் கேக்6 days 15 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
சுற்றுலா வந்த இடத்தில் விபரீதம்: கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு
06 May 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.