முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதே சரியான பதிலடி -பாபா ராம்தேவ்

திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுப்பதே சரியான பதிலடியாக இருக்கும் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்களின் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதனிடையே, தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதில் இந்திய இராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புல்வாமா தாக்குதலுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள பாபா ராம்தேவ், சுமார் 70 ஆண்டுகளாக நடந்துவரும் இந்தியா- பாகிஸ்தான் பிரச்சினையில் இதுவரை ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோரை இந்தியா இழந்துள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.

மேலும், இவ்விஷயத்தில் இனியும் இந்தியா பொறுமை காக்கமுடியாது எனத் தெரிவித்த அவர், போரின் வாயிலாக பாகிஸ்தானுக்கு இந்தியா பாடம் புகட்டுவது தான் சரியான தீர்வாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து