எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ஜிங் : எல்லையில் பதற்றமான சூழலை தொடர்ந்து அதிகப்படுத்த இந்தியா விரும்பவில்லை என்று சீனா மாநாட்டில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.
350 தீவிரவாதிகள் பலி
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது நேற்று முன்தினம் இந்திய விமானப்படை பதிலடித் தாக்குதல் நடத்தியது. இதில் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.
சுஷ்மா கோபம்
இந்த தாக்குதலுக்குப்பின் சீனாவில் உள்ள உஹென் மாநிலத்தில் உள்ள வாங் இ நகரில் இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றுள்ளார். இந்த மாநாடு தொடங்கும் முன் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இயை சந்தித்து சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.
அப்போது, அவரிடம் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 கொல்லப்பட்டது குறித்து அவர் இந்தியாவின் வேதனையையும், கோபத்தையும் வெளிப்படுத்தினார். இந்த ஆண்டின் நாம் இருவரும் முதல்முறையாக சந்திக்கிறோம். இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்துக்கு ஒத்துழைப்புடன் கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதன்பின் தனது தொடக்க உரையில் மத்தியஅமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், புல்வாமா தாக்குதல் குறித்து மிகுந்த உணர்ச்சியுடன் பேசியதாவது:
தாக்குதல் நடத்தியது ஏன்?
இந்தியாவில் மிகுந்த கோபமும், துயரமும் இருக்கும் சூழலில் நான் இப்போது சீனாவுக்கு வந்திருக்கிறேன். ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் எங்கள் ராணுவத்தினர் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதல் மிகவும் மோசமான தாக்குதல். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவுடன், அவர்களின் மண்ணில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு செய்துள்ளது. இந்த தாக்குதல் என்பது, ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து பாதுகாத்து வருவதாலும், தண்டனையிலிருந்து தொடர்ந்து தப்பித்து வருவதாலும் நடந்துள்ளது. நேரடியாக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.
தாக்குதலை நடத்த திட்டம்
புல்வாமா தாக்குதலுக்குப் பின் ஐ.நா.வின் ஒட்டுமொத்த உறுப்பினர்களும் தாக்குதலை ஒருமித்த உணர்வுடன் கண்டித்துள்ளனர். தங்கள் மண்ணில் செயல்படும் தீவிரவாத குழுக்கள் குறித்து பாகிஸ்தான் கவலை கொள்ளவில்லை, அவர்களைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் அக்கறை காட்டவில்லை. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து எங்கள் நாட்டில் பல்வேறு நகரங்களில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதிகள் பல தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன. இதன் காரணமாகவே, எங்களைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக, தற்காப்பு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தோம். மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்படாத வகையில் நாங்கள் இலக்குகளை தீர்மானித்தோம்.
இந்தியா விரும்பவில்லை
அதே சமயம், பாகிஸ்தான் ராணுவத்தின் எந்தவிதமான இலக்குகளையும் நாங்கள் இலக்காக வைக்கவில்லை. எங்களுடைய நடவடிக்கை என்பது, இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் கட்டமைப்புகளை சிதைப்பதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். இந்த பதற்றமான சூழலை தொடர்ந்து அதிகப்படுத்த இந்தியா விரும்பவில்லை. இவ்வாறு சுஷ்மா சுவராஜ் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.