முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருவாயூர் கோவிலில் தரிசனம்: 8-ம் தேதி பிரதமர் கேரளா வருகை

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : குருவாயூரில் தரிசனம் செய்வதற்காக, பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி கேரளா வருகிறார்.

பாரத பிரதமராக 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள மோடி, வரும் 8-ம் தேதி கேரளா வர திட்டமிட்டுள்ளார். அன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொச்சி வரும் அவர், அங்கிருந்து குருவாயூர் கோயிலுக்கு செல்கிறார். நண்பகல் 12 மணியளவில் குருவாயூர் கோயிலில் சாமி கும்பிடுகிறார். அவருடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும் வருகிறார்.

பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் மோடி குருவாயூர் தரிசனத்திற்கு வருவார் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், அதிகாரபூர்வமாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து குருவாயூர் தேவஸம்போர்டுக்கு பிரதமர் வருகை குறித்த தகவல் கிடைத்தது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் வரும் 7, 8 தேதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து