எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை யானைக்கவுனி மேம்பாலம் கட்டும் பணி எப்போது தொடங்கும் என்பது குறித்து தி.மு.க. உறுப்பினர் சேகர்பாபு கேட்ட கேள்விக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்தார்.
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது தி.மு.க. உறுப்பினர் பி.கே.சேகர்பாபு சென்னையில் இருப்புப்பாதை விரிவாக்க பணிக்காக யானைக்கவுனி மேம்பாலம் மூடப்பட்டது. புதிய மேம்பாலம் அமைக்க மாநகராட்சியும் ரயில்வே துறையும் தலா ரூ 30 கோடி நிதியில் திட்டமிடப்பட்டது. இந்த பாலம் மூடப்பட்டு இரண்டு வருடங்களாகி விட்டது. இன்னும் மேம்பாலம் இடிப்பு பணி தொடங்கவில்லை. இதற்காக மாநகராட்சி. ரயில்வே துறை ஆகியவை இணைந்த ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்து பேசியதாவது;-
சென்னை மாநகராட்சியில், வால்டாக்ஸ் சாலை மற்றும் ராஜா முத்தையா சாலைகளை இணைக்கும், யானைக்கவுனி பாலச் சாலையில் அமைந்துள்ள, யானைக்கவுனி பாலம் ரயில்வே துறையை சார்ந்ததாகும். இப்பாலத்தின் இருபுறமும் உள்ள, அணுகு சாலை பகுதி மட்டுமே, சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.இப்பாலம் தற்போது மிகவும் பழுதடைந்துள்ள காரணத்தால், கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் செல்வதற்கு, ரயில்வே துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையால், தடை செய்யப்பட்டுள்ளது. இப்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் கீழ் உள்ள, இருப்புப் பாதைகளை கூடுதலாக அமைக்க ஏதுவாக, பாலத்தின் ரயில்வே பகுதி நீளத்தை, 47 மீட்டரிலிருந்து 150 மீட்டருக்கு நீட்டிக்க ரயில்வே துறை உத்தேசித்துள்ளது.இப்பாலத்தை இடித்து விட்டு, புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணியில் தற்போதுள்ள 50 மீட்டர் நீளமுள்ள ரயில்வே பகுதி பாலம் அமைப்பதற்கு, ரயில்வே துறை பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 50:50 விகிதாச்சாரத்தில் நிதி பங்களிப்பாகவும், புதிதாக 100மீ நீட்டிக்கப்படவுள்ள பகுதியில் பாலம் அமைக்கும் பணி முற்றிலும் ரயில்வே துறை நிதி மூலமும் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பகுதி பாலப்பணிக்கான பொது சீரமைப்பு வரைபடத்தை ரயில்வே துறை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சமர்ப்பித்தது. அந்த வரைபடத்திற்கு சென்னை மாநகராட்சி 28.02.2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.அதன் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட, அணுகு சாலைப் பகுதிக்கான, வடிவமைப்பு மற்றும் வரைபடம் தயாரிக்கும் பணிக்கு கலந்தறிதற்குரியவர் தெரிவு செய்யப்பட்டு, வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி பகுதிக்கான மதிப்பீட்டுத் தொகை ரூ. 30 கோடிகள் ஆகும்.பழுதடைந்துள்ள ரயில்வே பாலத்தின் கீழ், ரயில்வே துறையால் இரும்புத்தூண்கள் நிறுத்தப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளதால், யானைக்கவுனி மேம்பாலத்தில் கனரக மற்றும் இலகுரக வாகனப் போக்குவரத்து ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. பேசின்பாலச் சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை - ஈ.வே.ரா பெரியார் சாலைகள் வழியாக, போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
மேலும், பாலத்தினை இடிப்பதற்கு ஏதுவாக, இரு சக்கர வாகனங்கள் செல்வதையும் தடை செய்ய ரயில்வே நிர்வாகம் காவல் துறையை அணுகியதில், மேம்பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்த பின்னர், அனைத்து வாகனங்களையும் தடை செய்யலாமென காவல்துறை தெரிவித்துள்ளது. ரயில்வே பகுதி பாலப்பணிக்கான மதிப்பீடுகள் ரயில்வே துறையால் தயாரிக்கப்பட்டு பழைய பாலத்தினை இடித்து விட்டு புதியதாக பாலம் அமைக்கும் பணிக்கு ஒப்பப்புள்ளிகள் கோரப்பட்டதில் ஒப்பந்தப்புள்ளிகள் எதுவும் பெறப்படவில்லை. எனவே, ரயில்வே துறை பழைய பாலத்தினை இடிப்பதற்கு மட்டும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டதில் மிக அதிகமான விலைப்புள்ளிகள் பெறப்பட்டதால் அவ்வொப்பத்தினை ரத்து செய்து மறு ஒப்பம் ரயில்வே துறையால் கோரப்பட்டுள்ளது. ஒப்ப நாள் 23.07.2019 எனவும், ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தளவாடங்களை மாற்றியமைத்த பின்னர் பழைய பாலத்தினை இடிப்பதற்கான பணிகள் துவங்கப்படும் எனவும், புதிய பாலத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் தனியே கோரப்படும் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில்வே துறையால் ரயில்வே பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான ஒப்பப்புள்ளிகள் கோரப்பட்டவுடன், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கான ஒப்பப்புள்ளி கோரப்பட்டு பணிகள் துவங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
கொளுத்தும் வெயில்:கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
06 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.