எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் : தி.மு.க.வில் மன்னராட்சி நடைபெறுகின்றது என்றும், ஸ்டாலின் குடும்பத்தை தவிர வேறு யாரும் உயர் பதவிகளுக்கு வர முடியாது என்றும் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசினார்.
வேலூர் எம்.பி. தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக ஏ.சி.சண்முகம் போட்டியிடுகின்றார். ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றார். கே.வி.குப்பம் பகுதி காமாட்சியம்மன் கோவில் பேட்டை பகுதியில் நெசவாளர்களோடு அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்துரையாடினார். அப்போது நெசவாளர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அமைச்சரிடம் கொடுத்தனர். நெசவாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது,
அம்மாவின் வழியில் எடப்பாடியார் தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கி வருகின்றார். ஒவ்வொரு திட்டமும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். சாதாரண ஏழை மக்களின் கஷ்டங்களை, நாடித்துடிப்புகளை அறிந்து எடப்பாடியார் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். விவசாயத்துக்கு அடுத்த படியாக குறைந்த முதலீட்டில் அதிக பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிலாக கைத்தறி நெசவுத் தொழில் இருந்து வருகிறது. கைத்தறி நெசவுத் தொழில் குடிசை தொழிலாக தங்கள் வாழ்விடத்தில் இருந்தே குடும்ப உறுப்பினர்களால் செய்யப்படுகிறது. குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதிகளை சேர்ந்த பலர் கைத்தறி நெசவு தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். குடியாத்தம் பகுதிகளில் மட்டும் 30 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுமார் 3 ஆயிரம் நெசவாளர்கள் மற்றும் தனியார் மூலம் சுமார் 4 ஆயிரம் நெசவாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் நெசவு தொழிலை செய்து வருகிறார்கள். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதில் அ.தி.மு.க. அரசு பெரும் பங்காற்றி வருகிறது. கைத்தறி மற்றும் துணித் தொழிலின் வளர்ச்சிக்கு தமிழக அரசிற்கு முதுகெலும்பாக செயல்பட்டு வருவது. உற்பத்தி திறனை அதிகரித்து வடிவமைப்பில் புதுமைகளை புகுத்தி நெசவாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கும் பல நலத் திட்டங்களை கொண்டு சேர்த்து நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதுடன், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக திகழ்கிறது. அ.தி.மு.க. சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உங்களுக்காக ஓடோடி உழைக்க கூடியவர். அவரை நீங்கள் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும். அ.தி.மு.க. தொண்டர்கள் நிறைந்த கட்சி. தி.மு.க. குண்டர்கள் நிறைந்த கட்சி. அ.தி.மு.க. மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகின்றது. அ.தி.மு.க. அரசின் திட்டங்களை தி.மு.க. வழக்குப் போட்டு தடுத்து நிறுத்துகின்றது. தி.மு.க.விற்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வைக்க வேண்டும்.
முதல்வர் எடப்பாடியார் ஆட்சியில் தான் நல்ல நல்ல புதிய திட்டங்கள் வருகின்றது. தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் சாலை வசதிகள் நன்றாக உள்ளது. எந்த தொழில் செய்பவர்களுக்கும் எந்த இடையூறும் இந்த அரசால் ஏற்படுவது கிடையாது . பொங்கல் பரிசு ரூ.1000 தமிழகம் முழுவதும் 2 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போல் வறுமைகோட்டிற்கு கீழே உள்ள 60 லட்சம் மக்களுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கும் திட்டம் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் கொண்டு வந்தார். அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேட்பாளராக அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்ளார். அவருக்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும். தி.மு.க.வில் மன்னர் ஆட்சி நடக்கின்றது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், அவரது பேரன் உதயாநிதி ஸ்டாலின், மருமகன் தயாநிதி, மகள் கனிமொழி இப்படி அவர்களது குடும்பத்தினர் மட்டுமே தி.மு.க.வில் உயர்பதவியில் இருக்க முடியும். அ.தி.மு.க.வில் மட்டுமே சாதாரண தொண்டர் கூட சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும். தமிழக மக்களுக்கு அ.தி.மு.க.வில் மட்டுமே நல்லது செய்ய முடியும். வேலூர் தொகுதி மக்கள் என்றும் அ.தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் போலி வீடியோக்களை உருவாக்கி தவறான தகவலை பரப்புகின்றனர் : கர்நாடகாவில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
29 Apr 2024பெங்களூரு : தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி செயற்கை நுண்ணறிவு மூலம் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்றும் மத அடிப்பட
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.