முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பற்றிய ராகுலின் பேச்சு: காங்கிரசார் வெட்கப்பட வேண்டும்: அமித்ஷா

ஞாயிற்றுக்கிழமை, 1 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : காஷ்மீர் பற்றிய ராகுல் காந்தியின் பேச்சை நினைத்து காங்கிரசார் வெட்கப்பட வேண்டும் என்று அமித்ஷா பேசினார்.

குஜராத் மாநிலம் சில்வசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அரசியலமைப்பு 370- பிரிவை மோடி அரசு நீக்கியதை மக்கள் வரவேற்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்க்கிறது. ராகுல் காந்தி என்ன பேசினாலும் அதை பாகிஸ்தான் புகழ்கிறது. ஐ.நா.வில் அளித்த கடிதத்தில் கூட பாகிஸ்தான் ராகுல் காந்தியின் பேச்சைக் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிக்கும் ராகுல் காந்தியின் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சியினர் வெட்கப்பட வேண்டும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான 370 பிரிவை நீக்கியபின்புதான், அங்கு வளர்ச்சிக்கு வழி ஏற்பட்டு, பயங்கரவாதம் சவப்பெட்டியில் அடைக்கப்பட்டு கடைசி ஆணி அடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து