எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : அச்சத்தை போக்கி மனதை வலிமைபடுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்
ஒரு நாட்டில் மன்னன் உடல் நலமில்லாமல் இருந்தார் மன்னனை குணப்படுத்த பல்வேறு நாட்டு வைத்தியர்கள் முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை இறுதியில் ஒரு விகடகவி, மன்னனிடம் மன்னா என்னிடம் மருந்து ஒன்று உள்ளது. அதை நீங்கள் எனது வீட்டிற்கு தினந்தோறும் நடந்து வந்து வாங்க வேண்டும். அப்போதுதான் அந்த மருந்து உங்களுக்கு வேலை செய்யும் என்று கூறினர். மன்னனும் நம்பிக்கையுடன் தினந்தோறும் சென்று அந்த மருந்தை சாப்பிட்டால் இதனால் விரைவில் அவன் உடம்பு குணமானது. இது குறித்து அந்த மருத்துவரிடம் மன்னர் கேட்ட போது மன்னா அது ஒன்றுமில்லை.
உங்கள் உடலில் ஜலதோஷம் அதிகமாக இருந்தது. அதற்கு தேவையான மருந்து சுக்காகும். சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை. சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை. உங்கள் உள்ளத்தில் ஒரு அச்சம் ஒன்று இருந்தது. அந்த அச்சத்தால் எவ்வளவோ மருந்து கொடுத்தும் நீங்கள் குணமடையவில்லை.
ஆனால் இங்கு தற்போது அந்த அச்சத்தை போக்கி மனம் வலிமையுடன் வந்ததால் உங்கள் நோய் குணமானது. ஆகவே ஒரு நோயாளிக்கு மருந்து மட்டுமல்ல, மனம் வலிமை இருந்தால் தான் குணப்படுத்த முடியும் என்று கூறினான், ஆகவே நோய் தீர்வுக்கு தேவை மனம் வலிமை, தைரியம்தான் என்பது காலம் தொட்டு கூறப்பட்டு வருகிறது,
உலகை இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா என்ற கொடிய வைரஸ் நோயால் உலக மக்கள் மிரண்டுள்ளனர், இந்த தொற்று நோயிலிருந்து தமிழக மக்களை காக்கும் வண்ணம் முதல்வர் இந்தியாவிற்கே வழிகாட்டும் வண்ணம் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனால்தான் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமானோர் குணமடைந்து வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களை பீதியடைய செய்யும் வகையிலும் மக்களின் மனதில் வலிமையை குறைக்கும் வகையிலும் விஷம பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனை முறியடிக்கும் வகையில் முதல்வர் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும், மனவலிமையூட்டும் வகையிலும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
அதனைத்தொடர்ந்து முதல்வரின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றுநோயால் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் இடங்களில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், பெரியபுள்ளான் என்ற செல்வம், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியா ராஜ், மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. தமிழரசன் உள்ளிட்டோர் நேரடியாக சென்று அங்கு இருக்கும் நோயாளிகளுக்கும், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர்.
இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;-
நீங்கள் அனைவரும் தைரியமாகவும், மனம் வலிமையுடன் இருக்க வேண்டும். உங்களுக்கு வேண்டிய அனைத்து மருத்துவ வசதிகளை முதல்வர் செய்து கொடுத்துள்ளார். அதே போல் சிகிச்சை பெறும் உங்களுக்கு தினந்தோறும் யோகா, மூன்று வேளையும் புரதம் நிறைந்த உணவு, மேலும் காலை மாலை இருவேளையும் பழச்சாறு மற்றும் சூப் வகைகள், பாசிப் பருப்பு, சுண்டல் உள்ளிட்ட சத்தான உணவுகள் உங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த நோய் வராமல் இருக்க அனைவரும் முககவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் நோயின் ஆரம்ப நிலையை கண்டறிந்து அதற்குரிய உயர் சிகிச்சை அளித்து வருவதால் அதிகமானோர் குணமடைந்து வருகின்றனர். நீங்கள் விரைவில் பூரண நலம் பெற முதல்வர் உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க சொன்னார். அதேபோல் இந்த மகத்தான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோரின் பணிகள் எல்லாம் மிகவும் சிறப்புக்குரியது. நீங்கள் இறைவனுக்கு சமமானவர்கள். உங்களுக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் நீங்கள் கேட்காமலே முதல்வர் செய்து வருகிறார்.
உங்கள் சேவையை பாராட்டி முதல்வர் எங்களை நேரடியாக அனுப்பி உங்களுக்கு தனது வாழ்த்துக்களை முதல்வர் தெரிவிக்க சொன்னார். நீங்கள் மனம் வலிமையுடன் நிற்க வேண்டும். இந்த நோய் என்பது தொற்று நோயாகும். நீங்கள் தினந்தோறும் நோயாளியை சந்திக்கும் பொழுது உடல் முழுக்க கவசங்கள் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மருந்து மாத்திரை நீங்கள் அதிகமாக உட்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து அம்மா பேரவை சார்பில் கொரானா நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர் களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி பகுதிகளான யாகப்பா நகர், தாசில்தார் நகர் ஆழ்வார்புரம் ஆகிய பகுதிகளில் முதல்வர் ஆணைக்கிணங்க நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனை நிலையங்கள், மற்றும் வீடு வீடாக நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் முகாம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து அதன் பின் மக்களிடத்தில் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது,
முக கவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நோயைப் பற்றி எதிர்க்கட்சிகள் கூறி வரும் விஷம பிரசாரத்தை நம்ப வேண்டாம். நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். மனம் வலிமையுடன் இருக்க வேண்டும்.
மதுரையில் அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. முன்பெல்லாம் நான்கு அறிகுறி இருந்தால் சோதனை செய்வார்கள். தற்போது ஒரு அறிகுறி இருந்தாலே முதல்வர் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். மதுரையில் 95 காய்ச்சல் முகாம்கள் உள்ளன. தற்போது மேலும் அதிகரிக்கப்பட உள்ளது. அதே போல் மதுரையில் 8,433 தெருக்களில் 1625 நோய் உள்ள பகுதிகளை தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு நுண்கிருமி தான். இந்த கிருமியை ஆரம்ப நிலையை கண்டுபிடித்துவிட்டால் உடனடியாக குணப்படுத்தி விடலாம். யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறினார்.
விவசாய கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் முருகன் என்பவர் கூறியதாவது,
நான் கடந்த ஒரு வாரம் முன்பு வந்தேன். தற்பொழுது எனது நோய் முற்றிலும் குணமடைந்து விட்டது. இங்கு காலையில் யோகா கற்றுத் தருகிறார்கள். அதே போல் சரியான முறையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. நான் ஆரம்பத்தில் பயந்தேன். ஆனால் முதல்வர் இதுபோன்று எடுத்து வரும் நடவடிக்கையால் எனக்கு பயமே போய் விட்டது. ஆகவே எங்களை போன்ற ஏழை, எளிய மக்களுக்கு முதல்வர் வரப்பிரசாதமாக திகழ்கிறார் என்று கூறினார்.
காய்ச்சல் முகாமில் பங்கேற்ற பெண்மணி மும்தாஜ் கூறியதாவது,
ஆரம்பத்தில் நாங்கள் அச்சத்துடன் இருந்தோம். ஆனால் தற்பொழுது முதல்வர் ஒவ்வொரு வீடாக சென்று நோயை கண்டறிய எங்கள் இல்லம் தேடி அரசின் சார்பில் மருத்துவ குழுவை அனுப்பி உள்ளார். இதன் மூலம் நோய் தெரியாமல் இருப்பவர்கள் எளிதில் கண்டறியப்படும். அதுமட்டுமல்லாது முதல்வர் வழங்கியுள்ள அறிவுரைகளை எங்களுக்கு அமைச்சர் வழங்கினார்.
இதன்மூலம் எனக்கு அச்சம் நீங்கி விட்டது. முதல்வரின் அறிவுரைகளான முக கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். இதை கடைபிடித்தாலே போதும். இந்த நோய் என்பது நம்மை அண்டாது என்று கூறியது எனக்கு முழு நம்பிக்கை பிறந்துள்ளது என்று கூறினார்
தோப்பூரில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ ஊழியர் கூறியதாவது,
இந்த புனித பொறுப்பிலிருக்கும் எங்களுக்கு முதல்வர் தெரிவித்த வாழ்த்துக்களை அமைச்சர் கூறிய பொழுது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதுமட்டுமல்லாது எங்களுக்கு மூன்று வேளை உணவும், தொடர்ந்து பாதுகாப்பு கவசம் வழங்கி எங்களின் உடல்நிலையில் அக்கறை கொண்டு எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து தற்போது எங்களுக்கு மனம் வலிமையுடன் இருக்க அறிவுரை வழங்கி வரும் முதல்வருக்கு ஒட்டுமொத்த மருத்துவ பணியாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 9 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்
16 May 2024சென்னை, சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவ
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.
-
பெண் எம்.பி மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
16 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி முயற்சி: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
16 May 2024லக்னோ, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் முயற்சித்தன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&nbs
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
16 May 2024சென்னை, தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அபராதம் விதித்துள்ளது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
நிலவில் கால்பதிக்கும் இந்தியா: கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள்: வைரலாகும் பாக். எம்.பி.யின் பேச்சு
16 May 2024இஸ்லாமாபாத், இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது என அந்நாட்டு எம்.பி.
-
கொடைக்கானலில் இன்று முதல் 61-வது மலர் கண்காட்சி துவக்கம்: ஒரு கோடி மலர்களால் பூத்துக்குலுங்கும் பிரையண்ட் பூங்கா
16 May 2024கொடைக்கானல், கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகின்றது. பிரையண்ட் பூங்காவில் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
-
பெங்களூரு மருத்துவமனையில் திருமாவளவனுக்கு கால்வீக்க சிகிச்சை
16 May 2024சென்னை, மக்களவைத் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக வி.சி.க.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
16 May 2024சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்
-
10, 12-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி: தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு
16 May 2024சென்னை, தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழில் சென்டம் எடுத்த மாணவர்களுக்கு மாநில
-
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
16 May 2024சென்னை, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நரம்பியல்துறைக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ. 65 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
16 May 2024புது டெல்லி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு: வரும் 19-ம் தேதி தொடங்க திட்டம்
16 May 2024நாகை, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சுலோவேக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது 71 வயதான எழுத்தாளர் என தகவல்
16 May 2024மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று முன்தினம் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்தார்.
-
புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடற்கரையில் இருந்து மக்களை வெளியேற்றிய போலீசார்
16 May 2024புதுச்சேரி, புதுச்சேரியில் நேற்று காலை முதலே அவ்வப்போது சாரல் மழை பொழிகிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை
16 May 2024ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
16 May 2024சென்னை, செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
கொச்சி துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய வாலிபர் கைது
16 May 2024திருவனந்தபுரம், கொச்சி துறைமுகத்தில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய வாலிபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மாணவர் தற்கொலை
16 May 2024சென்னை, ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர 1.50 லட்சம் பேர் விண்ணப்பம்
16 May 2024சென்னை, பொறியியல் கல்லூரிகளில் சேர கடந்த 10 நாட்களில் 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.