முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவின் 2-வது அலை சில வாரங்களுக்கு மிக மோசமாக இருக்கும் : டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களை அச்சப்படுத்துவதற்காக கூறவில்லை. இதுதான் நிதர்சனம் என்றும்  மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பல்வேறு தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்த வழக்குகளை டெல்லி ஐகோர்ட் நேற்று விசாரித்தது. அப்போது டெல்லி அரசின் சார்பாக ஆக்சிஜன் பற்றாக்குறை அதிக அளவில் இருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்யவில்லை என்றால் டெல்லியே சீரழிந்து விடும் என்று கூறப்பட்டது. 

அப்போது மத்திய அரசிடம் பல கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.  இதையடுத்து அனைத்து மக்களும் தயாராக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் கொரோனாவின் 2-வது அலை அடுத்த சில வாரங்களுக்கு மிக மோசமானதாக இருக்கும். மக்களை அச்சப்படுத்துவதற்காக இதனை சொல்லவில்லை.

இதுதான் நிதர்சனம். எனவே மக்கள் இதனை எதிர்கொள்வதற்கு முழு அளவில் தயாராக இருக்க வேண்டும். மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. அதேபோல ஆக்சிஜன் சப்ளை உள்ளிட்ட விஷயங்களை சுமூகமாக சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து