முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-ம் தேதி முதல் வைகை அணையை திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 1 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வைகை அணையை வரும் 4-ம் தேதியில் இருந்து 120 நாட்களுக்கு திறக்க முதல்வர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரம் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் போதுமான அளவில் நீர்இருப்பு இல்லாததால் கடந்த 12 ஆண்டுகளாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கடைசியாக 2008-ம் ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதன் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து 60 அடிக்கும் மேல் நிரம்பி காட்சியளிக்கிறது. இதையடுத்து தண்ணீர் திறக்க அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறையினர் அறிக்கை சமர்ப்பித்தனர். இதனை தொடர்ந்து முதல்வர்  ஸ்டாலின் என்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 

வைகை அணையை வரும் 4-ம் தேதி திறக்க உத்தரவிட்டுள்ளார். அணையில் இருந்து பாசன வசதிக்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வினாடிக்கு 6,739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த தண்ணீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர், மதுரை மாவட்டம் வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர் என மொத்தம் 45,041 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து