எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது இன்னிங்சில் பும்ரா 3 விக்கெட்களையும், முகமது சிராஜ் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
181 ரன்கள்...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 364 ரன்களும், இங்கிலாந்து 391 ரன்களும் குவித்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 4-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 14 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
209 ரன்கள்...
இந்த நிலையில் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த ரிஷாப் பண்ட் 22 ரன்னில் வேகப்பந்து வீச்சாளர் ராபின்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆனார். இஷாந்த் ஷர்மாவும் (16 ரன்) அவரது பந்து வீச்சுக்கே வீழ்ந்தார். அப்போது இந்தியா 8 விக்கெட்டுக்கு 209 ரன்களுடன் சிக்கலில் தவித்தது. இங்கிலாந்தின் கை சற்று ஓங்கியது போல் தெரிந்தது.
ஷமி - பும்ரா அசத்தல்...
இந்த சூழலில் 9-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த முகமது ஷமியும், ஜஸ்பிரித் பும்ராவும் இங்கிலாந்தின் உற்சாகத்தை சீர்குலைத்தனர். இருவரும் கைதேர்ந்த பேட்ஸ்மேன்கள் போன்று விளையாடி வியக்க வைத்தனர்.
பவுன்சர் பந்து...
பும்ராவுக்கு, தொடக்கத்தில் அடுக்கடுக்கான பவுன்சர் பந்துகளை வீசி இங்கிலாந்த பவுலர்கள் குடைச்சல் கொடுத்தனர். இதில் மார்க்வுட் வீசிய ஒரு பந்து அவரது ஹெல்மெட்டை பயங்கரமாக தாக்கியது. உடனடியாக அணியின் பிசியோதெரபிஸ்ட் வந்து அவரை சோதித்து பார்த்தார். காயம் எதுவும் இல்லை என்று கூறியதையடுத்து தொடர்ந்து பேட்டிங் செய்தார்.
2-வது அரைசதம்...
இன்னொரு முறை ஆண்டர்சன் வீசிய பந்தும் அவரது ஹெல்மெட்டை பதம் பார்த்தது. மறுமுனையில் முகமது ஷமி, சிரமமின்றி இங்கிலாந்தின் பந்து வீச்சை வறுத்தெடுத்தார். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்து ஒரு கட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் நொந்தே போனார்கள். ஷமி தனது 2-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
இந்தியா டிக்ளேர்...
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி 2-வது இன்னிங்சில் 109.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 298 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. முகமது ஷமி 56 ரன்களுடனும் (70 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஜஸ்பிரித் பும்ரா 34 ரன்களுடனும் (64 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.
272 ரன்கள் இலக்கு...
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டிரா செய்வதற்கு குறைந்தது 60 ஓவர்கள் தாக்குப்பிடித்தாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது.
டக்-அவுட்...
தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் (0), டாம் சிப்லி (0) இருவரும் இந்திய வேக தாக்குதலில் டக்-அவுட் ஆனார்கள். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஒன்றில் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இருவரும் ரன் இன்றி சரண் அடைந்தது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து 4 ரன்னில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த ஹசீப் ஹமீத் 9 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோ 2 ரன்னிலும் வெளியேற்றப்பட்டார்.
ஜோ ரூட் அவுட்...
முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அபாயகரமான பேட்ஸ்மேன் கேப்டன் ஜோ ரூட்டை (33 ரன், 60 பந்து, 5 பவுண்டரி) இந்த முறை பும்ரா வேட்டையாடினார். அவரது பந்து வீச்சில் ஜோ ரூட் ஸ்லிப்பில் கோலிடம் பிடிபட்டார். இதனால் இந்தியாவின் பிடி மேலும் இறுகியது.
மொயீன் அலி - சாம்...
விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும் வந்த வேகத்தில் வெளியேறி இருக்க வேண்டியது. 2 ரன்னில் இருந்த போது அவர் கொடுத்த மிக எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற கோலி வீணடித்து விட்டார். அதன் பிறகு அவர் தான் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக மாறினார். அவர் ஒரு பக்கம் போராட மறுமுனையில் மொயீன் அலி 13 ரன்னிலும், சாம் கார்ரன் ரன்இன்றியும் நடையை கட்டினார்.
பும்ரா - சிராஜ்...
ராபின்சன் 9 ரன்னில் (35 பந்து) பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. டி.ஆர்.எஸ்.-ன்படி கோலி அப்பீல் செய்தே சாதகமான முடிவை பெற்றார். தொடர்ந்து ஜோஸ்பட்லர் 25 ரன்களிலும் (96 பந்து, 3 பவுண்டரி), ஆண்டர்சன் ரன்இன்றியும் முகமது சிராஜியின் பந்துவீச்சுக்கு இரையானார்கள்.
இந்தியா வெற்றி...
முடிவில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 51.5 ஓவர்களில் 120 ரன்னில் சுருண்டது. இன்னும் அரைமணி நேரம் தாக்குப்பிடித்து இருந்தால் ஆட்டம் டிராவில் முடிந்திருக்கும். இதன் மூலம் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும், பும்ரா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், ஷமி ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த இந்திய வீரர் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்தியா முன்னிலை...
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் வருகிற 25-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.
முதல் இன்னிங்ஸ்
1) ராகுல் - 129. 2) ரோஹித் - 83. 3) கோலி - 42. 4) ஜடேஜா - 40.
இஷாந்த் சர்மா - 3 விக்கெட்டுகள், ஷமி - 2 விக்கெட்டுகள், சிராஜ் - 4 விக்கெட்டுகள், ஜடேஜா - 1 ரன் அவுட்
2-வது இன்னிங்ஸ்
1) புஜாரா - 45, 2) ரஹானே - 61, 3) ஷமி - 56* , 4) பும்ரா - 34*.
பும்ரா - 3 விக்கெட்டுகள், சிராஜ் - 4 விக்கெட்டுகள், இஷாந்த் சர்மா - 2 விக்கெட்டுகள்,
இரு இன்னிங்ஸிலும்....
1) ரிஷப் பந்த் = 4 டிஸ்மிஸல்கள், இஷாந்த் சர்மா - 5 விக்கெட்டுகள், சிராஜ் - 8 விக்கெட்டுகள்.
இந்தியா 3-வது வெற்றி
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. 1986-ம் ஆண்டில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையி்லான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அதன்பின், 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014-ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இது லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி பெற்றுள்ள மூன்றாவது வெற்றி ஆகும். மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த 10-வது இந்திய வீரர் கே.எல்.ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.
லார்ட்ஸ் டெஸ்ட் - முக்கிய நிகழ்வுகள்
1) 1986-ல் கபில் தலைமையிலும் 2014-ல் தோனி தலைமையிலும் இந்திய அணி லார்ட்ஸ் டெஸ்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அங்குக் கிடைத்த 3-வது வெற்றி இது. வெளிநாடுகளில் மெல்போர்னில் இந்திய அணி அதிகபட்சமாக 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
2) இந்த டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். (ஒரு விக்கெட் ரன் அவுட்டில் கிடைத்தது). 2018-ல் ஜொஹன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் இதற்கு முன்பு டிரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்ற டெஸ்டிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
3) முதல் இன்னிங்ஸில் பும்ராவும் ஷமியும் டக் அவுட் ஆனார்கள். 2-வது இன்னிங்ஸில் தங்களுடைய அதிகபட்ச டெஸ்ட் ரன்களை (ஷமி - 59*, பும்ரா 29*) எடுத்துள்ளார்கள்.
4) இந்த டெஸ்டில் தனது 22-வது சதத்தை அடித்தார் கேப்டன் ரூட். இதற்கு முன்பு அவர் சதமடித்தபோது இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததில்லை. முதல்முறையாக சதமடித்தும் தோல்வியை எதிர்கொண்டுள்ளார் ரூட். (கிரீம் ஸ்மித் 27 சதங்கள் அடித்தும் தோல்வியை எதிர்கொள்ளவில்லை.)
5) 2014-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஷமியும் புவனேஸ்வர் குமாரும் 10-வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தார்கள். அதன்பிறகு 9-வது விக்கெட் மற்றும் 10-வது விக்கெட்டுக்கு இப்போதுதான் இந்திய அணி இந்தளவுக்கு அதிக ரன்களை எடுத்துள்ளது.
6) ரூட்டின் விக்கெட்டை 5 முறை வீழ்த்தியுள்ளார் பும்ரா. பேட் கம்மின்ஸூம் பும்ரா பந்துவீச்சில் 5 முறை ஆட்டமிழந்துள்ளார். டெஸ்டுகளில் பும்ராவின் 379 பந்துகளை எதிர்கொண்டு 180 ரன்கள் எடுத்து 5 முறை வீழ்ந்துள்ளார் ரூட்.
7) லார்ட்ஸ் டெஸ்டில் 7 முறை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள். டெஸ்டில் இங்கிலாந்து அணியினர் எடுத்த அதிகபட்ச டக் அவுட்களை இது சமன் செய்துள்ளது. கடைசியாக 1999-ல் தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது.
8) தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்தின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது. 2001 கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி ஆஸி.யின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது. 2016 சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டிலும் இந்திய அணி கடைசி நாளின் கடைசிப் பகுதியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வென்றது.
9) லார்ட்ஸில் இந்தியப் பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு இது. சிராஜுக்குக் கிடைத்த பெருமை. இதற்கு முன்பு கபில் தேவ் 1982-ல் 168 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
10) சொந்த மண்ணில் 4-வது இன்னிங்ஸில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி எடுத்த குறைந்தபட்ச ரன்கள்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்