முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா எழுச்சி பெற காரணம் ? பீல்டிங் கோச் ஆர். ஸ்ரீதர் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் இறுதி கட்டத்தில் பவுன்சர்களாக வீசி அவரைக் காயப்படுத்த முயற்சி செய்தார் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, இதற்காக அவர் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் மன்னிப்புக் கேட்கச் சென்ற போது அவரை அலட்சியப்படுத்தி புறந்தள்ளினார் ஆண்டர்சன். இதுதான் இந்திய அணியை எழுச்சி பெறச் செய்ததற்குக் காரணம் என்று பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

சவாலான வீரர்... 

இது தொடர்பாக ரவிச்சந்திரன் அஸ்வினின் யூ டியூப் சேனலில் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் கூறும்போது, “பும்ரா ஒரு சவாலான வேகப்பந்து வீச்சாளர் யாரையும் வேண்டுமென்றே காயப்படுத்த மாட்டார். பும்ரா அந்த ஓவரில் 8-10 பந்துகளை வீசினார். யார்க்கர்கள் பவுன்சர்கள், ஆண்டர்சன் உடலில் கிளவ்வில், கையில் ஹெல்மெட்டில் அடி வாங்கினார், ஆனால் விக்கெட்டைக் கொடுக்கவில்லை. 

பவுன்சர் வீச...

முன்பெல்லாம் டெய்ல் எண்டர்க்ளுக்கு பவுன்சர் வீசக்கூடாது என்பது ஒரு எழுதப்படாத ஒப்பந்தமாக இருந்தது, இப்போது அதெல்லாம் இல்லை. ஃபுல் லெந்த் வீசி விக்கெட் எடுத்துக் கொள் என்பதே அந்த எழுதா உடன்படிக்கை. இது ஒரு புரிதல்தான்.

அலட்சியப்படுத்தி... 

ஆட்டம் முடிந்த பிறகு இரு அணி வீரர்க்ளும் ஓய்வறைக்குத் திரும்பிய போது ஜிம்மி ஆண்டர்சனின் முதுகில் செல்லமாகத் தட்டி பும்ரா வேண்டுமென்றே செய்யவில்லை என்று கூற முனைந்தார். பும்ரா அங்கேயே மன்னிப்புக் கேட்டு முடிக்கப்பார்த்தார், ஆனால் ஆண்டர்சன் அவரை அலட்சியப்படுத்தி ஒதுக்கினார்.

தீயை மூட்டியது... 

இதுதான் அனைவரையும் இந்திய அணியில் தட்டி எழுப்பியது. இதற்கு முன் இந்திய அணி ஒன்று திரண்டு எழுந்ததில்லை என்று அர்த்தமல்ல. பும்ராவை ஆண்டர்சன் அலட்சியப்படுத்தியது அனைவரின் உள்ளிலும் தீயை மூட்டியது. அதன் விளைவைத்தான் 5ம் நாளில் பார்த்தோம்”என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து