எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன்: 14 ஆண்டுகளுக்கு பிறகு விராட்கோலி தலைமையிலான அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைக்குமா ? என்று ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
சுற்றுப்பயணம்...
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 151 ரன் வித்தியாசத்திலும், ஓவலில் நடந்த 4-வது டெஸ்டில் 157 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
இன்று தொடக்கம்...
லீட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதனால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.
கைப்பற்றுமா ?
இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுமா? என்று இந்திய ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் பின் தங்கி இருந்து பெற்ற வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
டிரா செய்தாலே...
கடைசி டெஸ்டை டிரா செய்தாலே இந்தியா தொடரை கைப்பற்றிவிடும். இங்கிலாந்து மண்ணில் இதற்கு முன்பு 3 தடவை இந்தியா டெஸ்ட் தொடரை வென்று இருந்தது. 1971-ல் அஜித் வடேகர் தலைமையிலான அணி 1-0 (3 டெஸ்ட்) என்ற கணக்கிலும், 1986-ல் கபில்தேவ் தலைமையிலான அணி 2-0 (3) என்ற கணக்கிலும், 2007-ல் ராகுல் டிராவிட் தலைமையில் 1-0 என்ற கணக்கிலும் (3) கைப்பற்றி இருந்தது.
புதிய சரித்திரம்...
14 ஆண்டுகளுக்கு பிறகு விராட்கோலி தலைமையிலான அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைக்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கில் தற்போது ரகானே மட்டுமே மோசமான நிலையில் உள்ளார். இதனால் அவர் இந்த டெஸ்டில் நீக்கப்படும் நிலையில் உள்ளார். வெற்றி அணி என்பதால் கோலி அதில் மாற்றம் செய்ய மாட்டார் என்ற கருத்து நிலவுகிறது.
அஸ்வின் - ஜடேஜா...
அஸ்வினுக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த டெஸ்டிலாவது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விவாதம் அதிகமாக எழுந்து வருகிறது. ஒருவேளை அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் ஜடேஜா நீக்கப்படலாம். ரோகித்சர்மா ஒரு சதம், 2 அரை சதத்துடன் 368 ரன்னும், ராகுல் ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 315 ரன்னும் எடுத்து உள்ளனர். பந்து வீச்சில் பும்ரா 18 விக்கெட்டும், சிராஜ் 14 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.
கட்டாயத்தில் இங்கி...
ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்துஅணிக்கு இந்தடெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. டிரா செய்தாலோ, தோற்றாலோ தொடரை இழந்து விடும். இதனால் தொடரை சமன் செய்ய அந்தஅணி வீரர்கள் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள். ஜோரூட் 3 சதம், ஒரு அரை சதத்துடன் 564 ரன்கள் குவித்து உள்ளார். அவர் ஒருவரே அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கிறார்.
131-வது டெஸ்ட்...
இரு அணிகளும் இன்று மோதுவது 131-வது டெஸ்ட் ஆகும். இதுவரை 130 போட்டியில் இந்தியா 31-ல், இங்கிலாந்து 49-ல் வெற்றி பெற்று உள்ளன. 50 டெஸ்ட் டிரா ஆனது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
BOX - 1
மேலும் ஒருவருக்கு....
ரவி சாஸ்திரி உள்பட 3 பயிற்சியாளர்களுக்கு அடுத்ததாக இந்திய அணியைச் சேர்ந்த மேலும் ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்திய அணியைச் சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து இந்திய அணியினரின் நேற்றைய பயிற்சி ரத்து செய்யப்பட்டது.
இந்திய வீரர்கள் அனைவரும் தங்கும் விடுதியில் தொடர்ந்து இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இந்திய அணி ஊழியர்களில் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் நேற்று இந்திய அணியைச் சேர்ந்த அனைவரும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்கள். இதன் முடிவு வந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும். இதனால் 5-வது டெஸ்ட் திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
BOX - 2
ஐ.பி.எல்.லுக்கு பாதிப்பு
இந்திய அணி வீரர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது செப்டம்பர் 19 முதல் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியையும் பாதிக்கும் எனத் தெரிகிறது. 5-வது டெஸ்ட் முடிந்த பிறகு ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 15 அன்று மான்செஸ்டரிலிருந்து துபைக்கு இந்திய வீரர்கள் செல்லவுள்ளார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.