முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடூர் அணையில் இருந்து நாளை முதல் 135 நாட்களுக்கு நீர் திறப்பு

வெள்ளிக்கிழமை, 7 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து நாளை 9-ம் தேதியில் இருந்து 23.05.2022 வரை 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையிலிருந்து 2021-2022 ஆம் ஆண்டிற்கு (பசலி 1431) பாசனத்திற்கு 09.01.2022 முதல் 23.05.2022 வரை 135 நாட்களுக்கு,   தண்ணீர் திறந்து விட  அரசு  ஆணையிட்டுள்ளது.  இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2200 ஏக்கர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 1000 ஏக்கர் ஆக மொத்தம் 3200 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து