முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் மனு தாக்கல்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      தமிழகம்
Anand 2023 02 01

Source: provided

ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதே போன்று தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார். 

இதனிடையே தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்று 2-ம் நாள் வேட்பு மனுத்தாக்கல் நிறைவில் தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் உட்பட 5 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து