எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பிரிஸ்டல் : பிரிஸ்டலில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற இங்கிலாந்து - அயர்லாந்து 3-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு இன்னிங்ஸ் கூட முழுதும் நிறைவுறாமல் முடிந்து போனாலும் இங்கிலாந்து 31 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்களை விளாசி பல பேட்டிங் ரெக்கார்டுகளைக் காலி செய்தது. 31 ஓவர்களுக்குப் பிறகு மழை காரணமாக ஆட்டம் நடக்கவில்லை. இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்று வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 61 ரன்களை விளாச மற்றொரு தொடக்க வீரர் ஃபில் ஜாக்ஸ் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 22 பந்துகளில் 39 ரன்களை அடித்து நொறுக்கினார். ஜாக் கிராலி தன் பங்கிற்கு 42 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 51 ரன்களை விளாசினார். இவர்கள் அனைவருக்கும் மேலாக இங்கிலாந்து டெஸ்ட் ஓப்பனர் பென் டக்கெட் 78 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 107 ரன்களை நொறுக்கினார். இதில் சில பல ரெக்கார்டுகளை காலி செய்தது இங்கிலாந்து.
சமீப காலத்திய ஆக்ரோஷ அணுகுமுறையைக் கைவிடாமல் ஆடிய இங்கிலாந்து முதல் ஓவரிலேயே பில் சால்ட் மூலம் அதிரடி தொடக்கம் கண்டது. அயர்லாந்து பவுலர் மார்க் அடைரின் முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் 1 சிக்ஸ் என்று 19 ரன்களை விளாசியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் ஓவர் அதிக ரன்கள் சாதனையான 19 ரன்கள் தென் ஆப்பிரிக்கா சாதனையை சமன் செய்தது. 2003-ல் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் 19 ரன்களை முதல் ஓவரிலேயே விளாசி உலக சாதனை புரிந்தார், அவர் அடித்தது யாரைத் தெரியுமா? இன்று உலக சாதனை மன்னனாகத் திகழும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் முதல் ஓவரில்தான் பிளந்து கட்டினார் கிரேம் ஸ்மித்.
இந்தத் தொடக்கம் நீடித்து, அதிரடியும் தொடர்ந்தது, முதல் 4 ஓவர்களில் சால்ட்-ஜாக்ஸ் கூட்டணி 60 ரன்களை விளாசினர். 5வது ஓவர் முடிவில் 66, 6வது ஓவர் முடிவில் 84. முதலில் பேட் செய்து எந்த ஒரு அணியும் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 5-6 ஓவர்களில் இவ்வளவு ரன்களை அடித்ததில்லை. பில் சால்ட் 6-வது ஓவரிலேயே 22 பந்துகளில் அரைசதம் எட்டினார். இது இங்கிலாந்தின் 5-வது அதிரடி அரைசதமாகும்.
இதற்கு முன் லியாம் லிவிங்ஸ்டன் 17 பந்துகளிலும், இயான் மோர்கன் 21 பந்துகளிலும் ஜானி பேர்ஸ்டோ 21 பந்துகளிலும் ஜாஸ் பட்லர் 22 பந்துகளிலும் அரைசதம் எட்டியுள்ளனர். 7வது ஓவரில் சால்ட் அவுட் ஆகும் போது இங்கிலாந்தின் ஸ்கோர் 87. இதில் சால்ட் 28 பந்துகளில்ல் 61 ரன்கள் பங்களிப்பு செய்தது இன்னொரு சாதனை. சால்ட்டிற்கும், ஜாக்ஸிற்குமான ஒட்டு மொத்த பார்ட்னர்ஷிப் ரன் ரேட் 12.42. அதிவேக ஒருநாள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் இது 6ம் இடத்தில் உள்ளது. ஆனால் இந்தச் சாதனையின் தனித்துவம் என்னவெனில் முந்தைய 5 சாதனைகளும் இலக்கை விரட்டும் போது வந்ததே, இது முதலில் பேட் செய்த போது வந்தது.
பில் சால்ட்டின் 28 பந்து 61 ரன்கள் என்பது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 50+ ஸ்கோர் ஆகும். சனத் ஜெயசூர்யா 1996-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 65 பந்துகளில் 134 எடுத்த போது ஸ்ட்ரைக் ரேட் 206.15, இப்போது பில் சால்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 217.85. 15 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்தின் ஸ்கோர் 145/2. 15 ஓவர்கள் முடிவில் இந்த ஸ்கோரும் புதிய இங்கிலாந்து சாதனையாகும். 27வது ஓவர் முடிவில் இங்கிலாந்து 250 ரன்களை எட்டியது. பென் டக்கெட் 78 பந்துகளில் விளாசிய 107 ரன்கள் அவரது முதல் ஒருநாள் சதமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
சென்னை விமானநிலையத்தில் 10 விமானங்கள் ரத்து
08 May 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்: துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு
08 May 2025சென்னை, தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் பிளஸ்-2 ரிசல்ட் வெளியீடு: அரியலூர் மாவட்டம் முதல் இடம்
08 May 2025சென்னை, தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
ஸ்ரீநகர் உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களில் பாகிஸ்தான நடத்த இருந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா
08 May 2025புதுடெல்லி: ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர் உள்ளிட்ட இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
-
தொடர்ந்து விழிப்போடு இருங்கள்: பல்வேறு துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, மாநில அதிகாரிகள், கள நிறுவனங்களுடன் இணைந்து நெருங்கிய ஒத்துழைப்பை பேண வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
-
பழனிசாமியின் கபட நாடகங்கள் ஒருநாளும் வெற்றி பெறாது: ஆர்.எஸ்.பாரதி பதிலடி
08 May 2025சென்னை, தி.மு.க.
-
எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
08 May 2025அமிர்தசரஸ், இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இந்தியா-பாக். போர் பதற்றம்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
08 May 2025இஸ்லாமாபாத், அமெரிக்க துணைத் தூதரகம் அனைத்து தூதரக ஊழியர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க உத்தரவிட்டுள்ளது.
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
08 May 2025சென்னை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு முழு ஆதரவு..!
08 May 2025புதுடெல்லி, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்றத்தை கூட்ட ராகுல் காந்தி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, பாராளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் * 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்கள் * தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 May 2025திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் மற்றும் 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்க
-
தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்வு
08 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே.8) தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனையானது.
-
இந்தியா - பாக். இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் அமெரிக்க அதிபர் அறிவிப்பு
08 May 2025வாஷிங்டன்: இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்
08 May 2025மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51 மணியளவில் நடைபெற்
-
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காத பிரதமர் மோடி..!
08 May 2025டெல்லி, எல்லையில் ஏற்பட்டிருக்கும் போர்ப் பதற்றம் தொடர்பாக நேற்று (மே 8) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.
-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் 98.5 சதவீதம் தேர்ச்சி
08 May 2025புதுச்சேரி, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி விழுக்காடு 98.5 சதவீதமாகும். இம்முறை அரசுப் பள்ளிகள் சி.பி.எஸ்.இ.
-
ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு திட்டம்:மத்திய அமைச்சரவை ஒப்புதல்
08 May 2025புதுடெல்லி, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் தேசிய திறன் பயிற்சி நிறுவன மேம்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தலைவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்: கிரண் ரிஜிஜு
08 May 2025புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற வி
-
கேளிக்கை வரி மசோதாவுக்கு தமிழ்நாடு கவர்னர் ஒப்புதல்
08 May 2025சென்னை, கேளிக்கை வரி மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
பாக். ஏவுகணையை இடைமறித்து அழித்த இந்தியா
08 May 2025புதுடெல்லி, பஞ்சாப்பில் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது.
-
சென்னை வெற்றியால் நெருக்கடி: பிளே ஆப்-க்கு முன்னேறுமா கொல்கத்தா?
08 May 2025கொல்கத்தா, சென்னை வெற்றியால் கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை வெற்றி...
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் முக்கிய தீவிரவாதி உயிரிழப்பு
08 May 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் செயல்பாட்டுத் தலைவரான அப்துல் ரவூப் அசார் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பா.ம.க. மாநாட்டிற்கு எதிரான மனு: சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி
08 May 2025சென்னை, பா.ம.க. மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
மத்திய அரசுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி
08 May 2025புதுடில்லி, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.