எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை:சென்னை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்வதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மழைநீர் தேங்குவதில் இருந்து கொசுக்கள் உற்பத்தி ஆகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த மாதத்தில் இருந்து படிப்படியாக டெங்கு பாதிப்பு உயர்ந்து வருகிறது.
சென்னையில் காய்ச்சலால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
ஸ்டான்லி, ராஜீவ்காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், கே.கே.நகர் அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு பாதித்து சிகிச்சை பெறுவோர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி தமிழக பொதுசுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதார பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் ஜனவரி முதல் இந்த மாதம் வரை 4454 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் 4 அல்லது 5 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இணை இயக்குனர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த துணை இயக்குனர்கள் மற்றும் துறை சார்ந்த பணியாளர்களுடன் இணைந்து கொசு ஒழிப்பு பணிகளையும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை கண்டறிந்து அவற்றை அகற்றவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறும் போது, டெங்கு பாசிட்டிவ் கேஸ் தினமும் 20 முதல் 30 வரை வருகிறது. கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்துள்ளது. சென்னை, நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து உள்ளது. அங்கு தீவிர கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.