முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024
Arvind-Kejriwal-wife-2024-0

புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் இன்றும், நாளையும் சுனிதா கெஜ்ரிவால் ரோடு ஷோ நடத்தவுள்ளதாகவும் அதிஷி தெரிவித்துள்ளார். 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மே 7-ம் தேதி வரை அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், டெல்லி மாநில அமைச்சருமான அதிஷி தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று கிழக்கு டெல்லி தொகுதியில் சுனிதா கெஜ்ரிவால் ரோடு ஷோ நடத்துகிறார் என்றும், நாளை மேற்கு டெல்லியில் அவர் ரோடு ஷோ நடத்துகிறார் என்றும் அதிஷி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, நியூ டெல்லி ஆகிய இடங்களில் ஆத் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.

காங்கிரஸ் கட்சி வடகிழக்கு டெல்லி, வடமேற்கு டெல்லி, சாந்த்னி சவுக் ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து