முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024      விளையாட்டு
0

Source: provided

ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம்  என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார். 

அபார வெற்றி...

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசனில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

260 ரன்கள் வரை... 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்சிஸ் கூறுகையில் : கடந்த இரண்டு போட்டிகளாகவே நாங்கள் சிறப்பான போராட்டத்தை அளித்திருந்தோம். சன்ரைசர்ஸ் அணி 270 ரன்களுக்கு மேல் அடித்தும் நாங்கள் 260 ரன்கள் வரை சென்றோம். அதேபோன்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் ஒரு ரன் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்தோம். இப்படி நெருக்கமாக சென்று போட்டிகளை இழந்து வந்த வேளையில் ஒரு வெற்றி என்பது நிச்சயம் எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும்.

நாங்கள் நிம்மதியாக... 

வெற்றியின் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம். போட்டியில் வெற்றி பெற்றால் நம்பிக்கை தானாக வெளிவரும். அந்த வகையில் இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த தொடரின் ஆரம்பத்தில் விராட் கோலி மட்டுமே ரன்களை குவித்து வந்த வேளையில் தற்போது கேமரூன் கிரீன் ரன் குவித்து வருவது எங்களுக்கு நன்மை சேர்த்து உள்ளது. சின்னசாமி மைதானத்தில் வைத்து மற்ற அணிகளை வீழ்த்துவது கடினமாக இருந்த வேளையில் தற்போது வெளியில் கிடைத்துள்ள இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தோல்விக்கு குறித்து...

தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில்., பந்துவீச்சில் சில ஓவர்களில் நாங்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம். அதேபோன்று பேட்டிங்கிலும் அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை துவக்கத்திலேயே இழந்ததால் எங்களால் இலக்கை நோக்கி வெற்றிகரமாக செல்ல முடியாமல் போனது. முதலில் பேட்டிங் செய்தால் எங்களால் நிறைய ரன்களை அடிக்க முடிகிறது. அதுதான் எங்களது அணிக்கு வேலையும் செய்கிறது.

நம்பி இருந்தோம்... 

ஆரம்பத்தில் சில வெற்றிகளை பெறுவதற்கு முன்னதாக நாங்கள் முதலில் பந்து வீசினால் வெற்றி பெறுவோம் என்று நம்பி இருந்தோம். ஆனால் அது எங்கள் வழியில் செல்லவில்லை. அதன் பின்னர் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்று வந்தோம். இந்நிலையில் தற்போது மீண்டும் தோல்வியை தழுவியது வருத்தம் அளிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு அணியுமே தொடர்ச்சியாக அனைத்து போட்டியிலும் வெற்றி பெற முடியாது. இந்த குறைகளை நீக்கிவிட்டு நாங்கள் நிச்சயம் வெற்றி பாதைக்கு திரும்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து