தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர தலைநகர் அமராவதிக்காக 4,285 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

செவ்வாய்க்கிழமை, 8 ஏப்ரல் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

அமராவதி : ஆந்​திர மாநில தலைநகருக்​காக மத்​திய அரசு நேற்று ரூ.4,285 கோடி நிதி வழங்கி உள்​ளது. 

ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி இரண்​டாக பிரிக்​கப்​பட்டு தெலங்​கானா மாநிலம் உரு​வானது. அப்​போது ஹைத​ரா​பாத் தெலங்​கா​னா​வின் தலைநக​ராக இருக்​கும் என்​றும், புதிய தலைநகரை உரு​வாக்​கும் வரை அல்​லது 10 ஆண்​டுகளுக்கு ஆந்​தி​ரா​வின் தலைநக​ராக​வும் ஹைத​ரா​பாத் இருக்​கும் என்​றும் மாநில பிரிவினை மசோதா​வில் கூறப்​பட்​டிருந்​தது. 

இருந்​தா​லும், மாநிலம் பிரிந்த பின்​னர் ஆந்​தி​ரா​வின் முதல்​வ​ரான சந்​திர​பாபு நாயுடு, குண்​டூர்​-​விஜய​வாடா இடையே அமராவ​தியை தலைநகர​மாக அறிவித்​தார். இதற்​காக அப்​பகுதி விவ​சாயிகள் சுமார் 30 ஆயிரம் ஏக்​கர் நிலத்தை தாமாகவே முன் வந்து வழங்​கினர். 2014 முதல் 2019 வரை அமராவ​தி​யில் சட்​டப்​பேர​வை, தலைமை செயல​கம் போன்​றவை கட்​டப்​பட்​டு, அங்​கேயே ஆட்​சி​யும் நடந்​தது.

ஆனால், 2019-ல் ஒய்​.எஸ்​.ஆர். காங்​கிரஸ் கட்​சி​யின் ஜெகன்​மோகன் ரெட்டி முதல்​வ​ரா​னார். இதையடுத்​து, அமராவ​தி​யில் சட்​டப்​பேர​வை​யும், கர்​னூலில் உயர் நீதிமன்​ற​மும், விசாகப்​பட்​டினத்​தில் தலைமை செயல​க​மும் இருக்​கும்​படி மூன்று தலைநகர கொள்​கையை கொண்டு வந்​தார். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்​பியது. இதனை தொடர்ந்து 2024-ல் ஆந்​தி​ரா​வில் நடந்த தேர்​தலில் தெலுங்கு தேசம் கூட்​டணி வெற்றி பெற்று சந்​திர​பாபு நாயுடு மீண்​டும் முதல்​வ​ரா​னார். மீண்​டும் அமராவ​தியே தலைநக​ராக இருக்​கும் என சந்​திர​பாபு நாயுடு அறி​வித்​ததோடு, அதனை மீண்​டும் உயிர்ப்​பிக்க மத்​திய அரசிடம் நிதி உதவி​யும் கேட்​டார்.

ஏற்​கெனவே மாநில பிரி​வினை மசோ​தா​வில் ஆந்​தி​ரா​வின் தலைநகரை நிர்​மாணிக்க மத்​திய அரசு நிதி உதவி செய்​யும் என கூறி​யிருப்​ப​தால், மத்​திய அரசும் நிதி உதவி வழங்க ஒப்​புக்​கொண்​டது. தற்போது அமராவ​தி​யில் கட்​டு​மானப் பணி​கள் கிடு​கிடு​வென நடந்து வரு​கின்​றன. மேலும், ஆந்​திர அரசுக்கு தேவை​யான அரசு கட்​டிடங்​கள், அரசு அதி​காரி​கள், ஊழியர்​களுக்​கான குடி​யிருப்பு கட்​டிடங்​கள், வணிக வளாகங்​கள் என அமராவ​தியை ஒரு நவீன தலைநகர​மாக சந்​திர​பாபு நாயுடு உரு​வாக்கி வரு​கிறார். இந்​நிலை​யில், ஆந்​தி​ரா​வுக்கு ரூ.4,285 கோடி நிதி உதவியை மத்​திய அரசு  வழங்கி இருக்​கிறது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து