எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கொல்கத்தா : முர்ஷிதாபாத் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கர் நீங்கள் தனித்துவிடப்படவில்லை என்றும் அவ்வாறு உணர வேண்டாம் என்றும் முர்ஷிதாபாத் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கர் ஆறுதல் தெரிவித்தார்.
வக்பு சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 11-ம் தேதி மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத் உள்ளிட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. அங்குள்ள இந்துக்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். பல குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. பலர் அண்டை மாநிலமான ஜார்க்கண்டின் பாகூர் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தனர். மால்டாவில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலும் ஏராளமானோர் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், முர்ஷிதாபாத்தின் பெட்போனா நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை குறிப்பாக பெண்களை தேசிய மகளிர் ஆணையக் குழு சந்தித்தது. தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் தலைமையிலான இக்குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டனர். அவர்கள் மத்தியில் பேசிய விஜயா ரஹத்கர், “துயரமான இந்த தருணத்தில் உங்களோடு நாங்கள் இருக்கிறோம் என்ற செய்தியை உங்களுக்குக் கூறவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். தயவுசெய்து கவலைப்பட வேண்டாம். நாடும் தேசிய மகளிர் ஆணையமும் உங்கள் அனைவருக்கும் பக்கபலமாக இருக்கிறது. நீங்கள் தனித்துவிடப்படவில்லை. அவ்வாறு உணர வேண்டாம். உங்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும்.” என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயா ரஹத்கர், “வன்முறையில் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சில பெண்கள் தங்கள் கணவரை, சிலர் தங்கள் மகனை இழந்துள்ளனர். வீட்டில் இருந்தவர்களை வெளியே இழுத்துச் சென்று படுகொலை செய்துள்ளனர். இது கொடூரமானது. மேற்கு வங்கத்தில் இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இதையெல்லாம் நாம் முதல்முறையாகப் பார்க்கிறோம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும். ஏப்ரல் 11 அன்று நடந்த வன்முறையில் தந்தை-மகன் என இருவரை இழந்த குடும்பத்தினரைச் சந்தித்தேன். மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இப்போது பேச முடியாமல் நான் தவிக்கிறேன். அவர்களின் வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். மாவட்டத்தின் சில பகுதிகளில் எல்லை பாதுகாப்புப் படையின் நிரந்தர முகாம்களை அமைக்க வேண்டும் என்றும், மூன்று உயிர்களைக் கொன்ற வகுப்புவாத மோதல்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்கள். நாங்கள் நிலைமையை ஆய்வு செய்தோம். இது தொடர்பான அறிக்கையை நாங்கள் மத்திய அரசுக்கு சமர்ப்பிப்போம்" என தெரிவித்தார். முர்ஷிதாபாத் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ ஸ்ரீரூப மித்ரா சவுத்ரி, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இங்கு வரவில்லை. அவர்தான் மாநில உள்துறை அமைச்சராகவும் உள்ளார். அவர் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டார்.
இங்குள்ள மக்களின் ஒரே கோரிக்கை எல்லை பாதுகாப்புப் படையின் நிரந்தர முகாம்தான். மேலும், நடந்த இந்த வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணையை அவர்கள் கோருகிறார்கள். அவர்கள் மாநில அரசின் சட்டம் ஒழுங்கை நம்பவில்லை. குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பயப்படுகிறார்கள். மம்தா பானர்ஜி அரசாங்கத்தால் சில பயங்கரவாதக் குழுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவர்கள் பெண்களைத் தாக்கியுள்ளனர். அவர்களிடம் கத்திகள் இருப்பதாக மிரட்டி, 'அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள், அப்போதுதான் நீங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்' என்றார்கள். இந்த மாதிரியான வார்த்தைகளை நான் கடந்த காலத்தில் கேள்விப்பட்டதே இல்லை.
நான் இங்கு பணியாற்றிய 12 ஆண்டுகளில், இந்த மாதிரியான இந்து முஸ்லிம் ஒற்றுமையின்மையை நான் பார்த்ததில்லை. மக்கள் இங்கு வேலை செய்கிறார்கள். அவர்கள் துர்கா பூஜை மற்றும் ஈத் கொண்டாடுகிறார்கள். இந்த வன்முறைக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். இவர்கள் உள்ளூர் முஸ்லிம் சகோதரர்கள் அல்ல. பயங்கரவாத ஆதரவு குழுக்கள் 12 முதல் 14 வயது வரையிலான உள்ளூர் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைப் பயன்படுத்தியுள்ளன. அவர்கள் பணத்துக்காக மட்டுமே இதைச் செய்துள்ளனர். நாம் இதை நம் நாட்டில் அனுமதிக்க முடியாது.” என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2025
06 May 2025 -
மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
06 May 2025சென்னை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 23.05.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேனி மாவட்டத்திற்கு மே 9, 12 விடுமுறை
06 May 2025தேனி, மே 6-ம் தேதியன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
-
வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
06 May 2025வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
-
இங்கு அனைவரும் சகோதர சகோதரிகளாக உள்ளனர்: தமிழிசைக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்
06 May 2025சென்னை, மொழியால், மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் நினைப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
முல்லை பெரியாறு வழக்கு: மேற்பார்வை குழு பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
06 May 2025புதுடெல்லி, முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு ஏப்ரல் 25ம் தேதி வழங்கி உள்ள பரிந்துரைகளை கேரளா அரசு செயல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட
-
பி.சி.சி.ஐ. சார்பில் சிராஜுக்கு வைர மோதிரம் அணிவித்த ரோகித் சர்மா
06 May 2025மும்பை : ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜுக்கு பி.சி.சி.ஐ.
-
நாளை மீனாட்சி திருக்கல்யாணம்: 2 சிறப்பு கட்டண சீட்டு விநியோகம்
06 May 2025மதுரை, மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு 2 வகையான சிறப்பு கட்டண சீட்டு விநியோகிக்கப்படவுள்ளது.
-
முர்ஷிதாபாத் வன்முறை: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து மம்தா பானர்ஜி ஆறுதல்
06 May 2025முர்ஷிதாபாத், முர்ஷிதாபாத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 280 குடும்பங்களுக்கு தலா ரூ.1.20 லட்சம் வழங்குவோம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
-
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை 2 நாட்கள் போர் பயிற்சி : ரபேல், மிராஜ் 2000 - சுகோய்-30 பங்கேற்பு
06 May 2025புதுடெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 2 நாட்கள் போர் பயிற்சி நடத்தவுள்ளதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
-
ரூ. 643.18 கோடி மதிப்பீட்டில் 22 புதிய தொழிற்பேட்டைகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
06 May 2025சென்னை, இதுவரை ரூ.364.93 கோடி மதிப்பில் 13 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசன், ரூ.
-
முல்லை பெரியாறு வழக்கு: மேற்பார்வை குழு பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
06 May 2025புதுடெல்லி, முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு ஏப்ரல் 25ம் தேதி வழங்கி உள்ள பரிந்துரைகளை கேரளா அரசு செயல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட
-
காஷ்மீரில் விபத்து: 2 பேர் பலி
06 May 2025பூஞ்ச் : காஷ்மீரில் சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை: மத்திய அரசு
06 May 2025புதுடெல்லி : நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு இனி இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
மோதல் தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலாளரிடம் பாக். பிரதமர் வேண்டுகோள்
06 May 2025இஸ்லாமாபாத் : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஐ.நா.
-
30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த உணவு பாதுகாப்பு துறை உத்தரவு
06 May 2025சென்னை : 30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உணவு பாதுகாப்பு துறை, முறையான அனுமதியின்றி குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்தால் உடனட
-
தோனிக்காக விதியை மாற்றியது இந்திய கிரிக்கெட்டுக்கு ஆபத்து : சுனில் கவாஸ்கர் விமர்சனம்
06 May 2025சென்னை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறியது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே.
-
பா.ஜ.க.வில் இருந்து அழைப்பு வந்தது: திருமாவளவன் பேச்சால் பரபரப்பு
06 May 2025சென்னை, டெல்லியை சேர்ந்த அதிகாரி ஒருவர் பா.ஜனதாவுக்கு என்னை அழைத்தார் என்று திருமாவளவன் பரபரப்பாக பேசி உள்ளார்.
-
இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவோம்: அமெரிக்கா அறிவிப்பு
06 May 2025வாஷிங்டன் : பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என்று அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சப
-
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை
06 May 2025புதுடெல்லி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ‘பொன்னியின் செல்வன் 2’ படத் தயாரிப்பாளர்களுக்கு எதிரான பாடல் காப்புரிமை வழக்கின் இடைக்கால உத்தரவுக்கு டெல்லி உயர் நீதின
-
தீவிரவாதத்துக்கு எதிரான போர்: இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு
06 May 2025டோக்கியோ : தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் விளாடிமிர் புதின் வாக்குறுதி அளித்துள்ளார்.
-
மழையால் ஐதராபாத் அணி வெளியேறியது
06 May 2025டெல்லி : ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேற்று மோதிய ஆட்டம், மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
-
இறுதிக்கட்டத்தை எட்டும் ஐ.பி.எல். பிளே-ஆப் பந்தயத்தில் நீடிக்கப் போவது யார்?
06 May 2025மும்பை : ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறப் போகும் அணி எது என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.
-
புதுக்கோட்டை, வடகாடு சம்பவம்: மதுபானக் கடைகளை மூட உத்தரவு
06 May 2025வடகாடு : புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
பட்டாசுகளுக்குத் தடை விதிக்க 3 மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2025புதுடெல்லி : தேசிய தலைநகரான தில்லி என்.சி.ஆர்.